Thursday, March 22, 2012

அம்மா

என்னை சுமையாக நீனைக்காமல்
சுகமாக சுமந்தவள் நீ
உன்னை தவிர என்னை நன்கு புரிந்தவர்கள்
யாரும் இல்லை .........
உன்னாலே இந்த பூமியில் நான் பிறந்தேன் ......
ஏன் வாழ நாளில் உனக்கு சேவை
செய்வதையே பெருமையாக நீனைக்கிறேன்
உன் உயிர் தந்து என்னை இன்றவள் நீ
உனக்காவே நான் வாழ்கிறேன்

என்கிறாய்…. ஏங்குகிறேன்….

என்னுடையது அனைத்தும்
உன்னுடையது என்கிறாய்….
உன்னை மட்டும்
என்னுடையது என்கிறாய்….
‘லூசு,
இது தான் காதல்’ என்கிறாய்…



-o0O0o-



உனக்காக
மீசைத் தியாகம் செய்தவனிடம்
”மடையா…
குத்துது’னு தான சொன்னேன்
வலிக்குது’னு எப்போ சொன்னேன்?”
என்கிறாய்…..



-o0O0o-



உன்னையே எப்போதும்
நினைக்கும் இதயத்தை
காயப்படுத்துவது ஏன்
என கேட்டால்,
‘இது உள்ளிருப்பு போராட்டம்’
என்கிறாய்…..



-o0O0o-



‘பேசாத போ’ என்கிறாய்….
திரும்பி அழைத்து
‘நான் கோபமா இருக்கேன்’
என்கிறாய்…..
மறுபடியும் அழைத்து
‘ஏன்டா கூப்ட மாட்ற?’
என்கிறாய்…..



-o0O0o-



இந்த
இன்ப இம்சையில்,
என்கிற’தெல்லாம்
நீ….
ஏங்குகிறதெல்லாம்
நான்….

-o0O0o-

உனக்காக

வேண்டும் தெய்வம்

வெவ்வேறாயினும்,

வேண்டுவதெல்லாம்

உன்னை மட்டுமே….

—-

நான் செய்யும் எதுவும்

உனக்காக,

நகம் வெட்டுவது உட்பட….

—-

ஆயிரம் இருக்கலாம்

உறவாய் உனக்கு….

ஆயினும் உயிராய்

நீ மட்டும் எனக்கு….

—-

எனை சுற்றி சூழ்ந்திருக்கிறாய்

பிரபஞ்சம் நிரப்பும்

காற்றைப் போல….

ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்

உன் இருத்தலை

சுவாசம் போல….

—-

உன்னாலேயே
என் பொறாமை தீ
எல்லைமீறி எரிகிறது….
நீ இதழ் பதிக்கும்
நீர் குவளைமீது கூட….

என் வலி உணர்….








வட்டிலிலிட்ட சோறு
வாயில் படாமல்
வாடி வதங்கிப்போகிறேன்
‘வா சாப்டலாம்’ என்ற
வார்த்தை நீ தராமல்…..



சிரிக்க மறந்து
சிந்தனை மறந்து
சிதிலமடைந்து போகிறேன்
சின்ன சின்ன சண்டை
எதுவுமில்லாமல்…..



அலைபேசியும்
ஆதரிப்பாரின்றி
அநாதையாகிப் போகிறது
‘அமு’ என்றவுன்
அழைப்பு வராமல்…..



எதிர்படுபவர்கள்
ஏதேனும் கேட்குமுன்
எச்சரிக்கையோடிருக்கிறேன்
எப்போதும் போல நீ
என்னருகே இல்லாமல்…..



ஒருநாளும் ஒருபொழுதும்
ஒரு பயமும், கவலையும்
அணுகாது காத்தாய்
அது பொய்த்துப்போயின்
போவேன் ஒன்றுமில்லாமல்…..



நானாய் வேண்டிக்கொண்ட இப்பிரிவு
வானாய் நீண்டு போக பூமிக்கு
வீணாய் வாழ்கிறேன் - அன்புகூர்ந்து
காணாய் என்அகதி நிலை…

Wednesday, March 21, 2012

பெண்

இந்த ஒரு வார்த்தைக்கு தான் எத்தனை
வசீகரம் இருக்கு ..........
ஒரு ஆண் தான் வாழ நாளில்
அவன் சந்திக்கு பெண்
முதலில் தாயாக , சகோதரியாக ,
தோழியாக , காதலியாக ,
மனைவியாக ,இப்படி அவன் சந்திக்கும்
அதனை பெண்களும் அவனுக்கு
சரியாக அமைந்துவிட்டால்
அவன் வாழக்கையில்
உயர்ந்த இடத்திற்கு சென்றுவிடுவான் ........
இதில் எதாவது ஒன்று சரியாக அமையாவிட்டாலும்
அவன் வாழக்கையில் எத்தனை
சோகம் நீரைந்ததாக இருக்கும்
என்பதை உணர்ந்தவனுக்கு தான் தெரியும் .........
அதனால் பெண் என்பவள்
போற்றி பாதுக்காக வேண்டியவள்
நல்ல குணமுள்ள பெண்களை போற்வோம் .............
நல்ல பெண்ணை காதலிப்போம் .........
கல்யாணம் செய்வோம் ............




--
dhinakaran
9788659283