Sunday, June 20, 2010


நீ!

 நான் விருப்பப்பட்டது என்றும் தொலைவில் தான்.. அன்று நிலவு! இன்று நீ! ** உன் அழைப்புக்கள் நிராகரிப்பு, குறுந்தகவல் புறந்தள்ளுதல், ஓரப்பார்வைகள் ஒதுக்குதல் இப்படி என்னவாயினும் செய்வேன் உன் செல்லக்கோபத்தைப் பெற! ** உன் நினைவுகளே வாழ்க்கை என்றான பிறகு நீ தொடுதூரத்தில் இருந்தாலென்ன? தொலை தூரத்தில் இருந்தால் என்ன ? ** குட்டி போடும் என்று நினைத்து குழந்தைகள் புத்தகத்தில் வைத்திருக்கும் மயிலிறகு போல் உன் நினைவுகள் பத்திரமாய்.. ** செடி கொடி மரத்தில் மட்டும்தான் பூ பூக்குமென யார் சொன்னது?? உன் பெயர் சொல்லி எல்லோரையும் என் முகம் பார்க்கச் சொல்!! ** என்ன எழுதினாலும், உன்னுடைய அவ்வவ்வா ஊஹூம்…” டேய் ப்ச்..ப்ச்.. லூஸு
மணா"    
"உன் முத்தம்"
க்களுக்கு முன்னால் என் கவிதைகள் தோற்று விடுகின்றன! ** என் கற்பனை வளத்தை கொன்றவள் நீ.. என் கற்பனைகள் உன்னைத் தாண்டிச் செல்ல மறுக்கின்றன... ** அத்தி பூத்தது... உன்னை பார்த்தது பார்த்த நாள் முதல் - தினமும் பூத்தது! ** உன்னிடம் பேச எவ்வளவு ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை உன்னிடம் பேசுபவர்களிடமும் பேசவேண்டும் என்பதில் . ** என்னை கொல்ல வாள் வேண்டாமடி உன் ஒரு நொடி மவுனம் போதும் ** மன்னித்து விடு! நான் உன்னை ஒருநாள் ஒருகணம் மறக்க மறந்துவிட்டேன்…. ** செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும் பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால்??

Me

hai everybody how are i am a new men in the website