Friday, December 2, 2011

நல்ல பதிவுகள்: Mullai Periyar DAM

நல்ல பதிவுகள்: Mullai Periyar DAM: The Mullai Periyar DAM Problem Hidden Truths & Solutions (Video with English subtitles)        புனல் மின்நிலையத்துக்காக கேர...

Monday, September 19, 2011

Wednesday, July 27, 2011

இந்திய மக்கள் தொகை 121 கோடி






புது தில்லி, மார்ச் 31: இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவர அறிக்கை தெரிவிக்கிறது.உலகில் வாழும் மொத்த மக்கள் தொகையில் 17.5 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 62.37 கோடி பேர் ஆண்கள், 58.65 கோடி பேர் பெண்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா. உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதம் பேர் இங்கு வாழ்கின்றனர்.அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேஸில், பாகிஸ்தான், வங்கதேசம், ஜப்பான் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையைக் கூட்டினால் கிடைக்கும் மொத்த எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.2001-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் நாட்டின் மக்கள் தொகை 18.10 கோடி அதிகரித்துள்ளது. இருப்பினும் மக்கள் தொகை பெருக்கம் விகிதம் 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2001-ல் மக்கள் தொகை பெருக்க விகிதம் 21.15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் சி. சந்திரமௌலி இத்தகவலை செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை வெளியிட்டார். அப்போது உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளையும் இருந்தார்.முதலிடத்தில் உத்தரப் பிரதேசம்: மக்கள் தொகை அதிகம் வாழும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 19.90 கோடி பேர் வசிக்கின்றனர். மிகக் குறைவாக லட்சத்தீவுகளில் 64,429 பேர் வாழ்கின்றனர்.உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் மக்கள் தொகை அமெரிக்காவின் மக்கள் தொகையைவிட அதிகமாகும்.மிக அதிக அளவில் தில்லியின் வடகிழக்கில் சராசரியாக 37,346 சதுர மீட்டர் பரப்பில் ஒருவர் வசிக்கின்றனர். அருணாசலப்பிரதேசத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒருவர் வீதம் வசிக்கின்றனர்.பெண்குழந்தை பிறப்பு விகிதம் சரிவு: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது 1,000 ஆண் குழந்தைகள் எனில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை 914 ஆக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆண்:பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இப்போது மிக அதிக அளவு குறைந்துள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் என்று சந்திரமெüலி கூறினார்.எழுத்தறிவு: எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதம் 74 சதவீதமாக உள்ளது. 2001-ம் ஆண்டு இது 64.83 சதவீதமாக இருந்தது. குறிப்பாக பெண்கள் எழுத்தறிவு பெறும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. 2001-ல் 53 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆண்களில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 75 சதவீதத்திலிருந்து 82 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலங்களில் மிஜோரத்தில் 98 சதவீதமாகவும், ஐஸ்வாலில் 98 சதவீதமாகவும், கேரளத்தில் 93 சதவீதமாகவும் உள்ளது.மிகக் குறைவாக எழுத்தறிவு பெற்றோர் மாநிலத்தில் பிகார் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது. இங்கு கல்வியறிவு பெற்றோர் விகிதம் 63.82 சதவீதமாக உள்ளது. 10 மாநிலங்கள் 85 சதவீதத்துக்கும் அதிகமான கல்வியறிவு பெற்றோரைக் கொண்டவையாக உள்ளன.6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15.58 கோடியாகும். 2001-ம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் 50 லட்சம் குறைவாகும். 20 மாநிலங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர். ஐந்து மாநிலங்களில் ஒரு லட்சம் குழந்தைகள் கூட இல்லாத நிலை உள்ளது.மக்கள் தொகை நெருக்கம் சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டரில் 382 பேர் வசிக்கின்றனர். இது 2001-ல் 325 ஆக இருந்தது.இப்போது மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியா மேற்கொண்ட 15-வது கணக்கெடுப்பாகும். 1872-ம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இம்முறை இரண்டு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2010 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2001 பிப்ரவரி 2 முதல் 28 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கான செலவு ரூ. 2,200 கோடி. மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் 27 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பணியில் 8 ஆயிரம் டன் பேப்பரும், 10,500 டன் எடையுள்ள பொருள்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Saturday, July 9, 2011

நானாவிதத் தேன் தேடி

நானாவிதத் தேன் தேடி
நாளும் சுவைத்தேன்..
நாதியிலார் நாசி காய்ந்து
நாம்பி நலிந்த கதை மறந்து

பாசி பூத்ததாய்த் தேய்ந்தது
பாணன் வீட்டுப் பாழுங்கிணறு
பாத்திரம் ஆனது அந்தோ அவன்
பாத்தில் தினக் கனவு

எய்ப்புண்டாம் எதிலும் எழுப்புண்டாம்
எய்துண்டாம் எதிரில் எரிவுண்டாம்
ஏற்புண்டாம் ஏயின் ஏக்கமுண்டாம்
ஏய்ப்புண்டாம் ஏற்பின் ஏர்புமுண்டாம்

பறவாதியோ என்ன பறதியோ
பனாத்தும் பகட்டும் பற்றுண்டு
பசப்பிழந்து பறண்டெடுத்து
பகுப்பிழந்து படாப்பழி சுமந்து

தகரடியும் தக்கடியுமாய்
தவறி வழி தடம் புரண்டு
தடாதடியும் தடாலடியுமாய்
தடுமாறித் தட்டழிந்தது வரவு

தேறுமோ தேனடை திரளுமோ
தேர்ந்தவன் தேங்கிடா நிலை
தேயுமோ தேசுமோ தேம்பிடா
தேற்றமே தேகிடம் தேங்குமோவென

வேகி வேசாடி
வேளைக்கொரு வேர்க்குரு ஒடித்து
வேலாழிக் கரையோரம் தீந்தென்றல் வேள்வியெடுத்து
வேண்டித்தவித்து வேசாறிப்போனேன்..

மேனோக்கிப் பார்க்கிறேன்..
மேகங்கள் மெல்ல மூடிக்கொண்டன
மேல் விழும் நீர் பார்க்கிறேன்
மேலனம் தவிர்த்து தப்பியோடக் காண்கிறேன்

சீறிய சிந்தனை எண்ணி சிரித்துக்கொண்டேன்..
சீற்றமில்லை சீவிய ரேகை துடைத்துக்கொண்டேன்..!!

Thursday, July 7, 2011

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!


தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!

நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.

கீழ் கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .

அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .

குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள் .

Tuesday, June 28, 2011

Love

உன் அன்புக்காக...

காலம் சென்றாலும்...
கனவுகள் மறைந்தாலும்...
கவிதைகள் அழிந்தாலும் ...
என உயிர் பிரிந்தாலும்...
காற்றோடு தொடர்ந்து வருவேன்...
உன் அன்புக்காக ...!

friend

உண்மையான அன்பு

உண்மையான அன்பை
மற்றவர்களுக்கு கொடுத்து பார்...
அதை விட அதிகமான அன்பை
ஒரு நாள் அவர்களிடம் இருந்து நீ பெறுவாய்...!

Happy Birthday


இப்புவியில் அழகான
வெண்ணிலவின் பிறந்த நாள்
ஒவ்வொரு மாதமும் வரும்..!
ஆனால் சித்திரையில்
பிறக்கும் வெண்ணிலவுக்கோ
ஆண்டுக்கொரு முறைதான்
பிறந்தநாள் வரும்..!
அது போலே
அச்சித்திரையில் பிறந்த
(வி)சித்திர நிலவே..!
காதல் முத்திரையால்
என் நித்திரையை கொள்ளையிடப்
பிறந்த என் பெண்ணிலவே..!
நீ பிறந்த இந்நாளில்
உனைப் பெற்றோர்க்கு
மகிழ்ச்சியோ இல்லையோ..?
எனக்காக நீ பிறந்திருக்கிறாய்
என்பதைக் கண்டு
எல்லையிலா மகிழ்ச்சி கொள்கிறேன்..!
உனைக் கொஞ்சி மகிழ்கிறேன்..!
இனியவளே உனக்கிந்த
யாழ்பித்தனின் பிரியமான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

பிறந்த நாள் வாழ்த்து!

பிறந்த நாள் வாழ்த்து!

Monday, April 4, 2011

we are the Champions

We are the Champions



இதை விட மிகச் சிறந்த தருணம் என்ன இருக்கும். என்ன ஒரு அருமையான தருணம் ... இந்த தருணத்திற்காகத்தான் மொத்த இந்தியாவுமே காத்திருந்தது ... இதை வர்ணிக்க வார்த்தைகள் இருக்கா ... என் இந்தியாவை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த இதை விட வேறு என்ன வேண்டும் ...

இந்த உலககோப்பை ஆரம்பித்த பொழுது இந்தியா தான் World Cup favorites னு சொன்னாலும் , இந்த அணியின் சுமாரான சொல்லப் போனால் பலவீனமான பந்துவீச்சை வைத்து எப்படி ஜெயிக்கப் போகிறார்கள் என்று பலருக்கும் சந்தேகம் இருந்தது. அதற்க்கு ஏற்றார் போல் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 338 ரன் எடுத்தும் இந்தியாவால் அதை defend பண்ண முடியல . மேலும் அடுத்து வந்த ஆட்டங்களில் 50 ஓவரையும் முழுமையாக விளையாட முடியாமல் அனைவரும் ஆட்டம் இழந்தனர் . மேலும் batting powerplay ல மிகச் சிறப்பாக score பண்ண முடியல. தென் ஆப்ரிகாவிற்கு எதிரான போட்டியில் 29 ரன்னுக்கு 9 wicket ஐ இழந்தது . ஆனால் அதற்கடுத்து வந்த காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் மிகச் சிறந்த மாற்றங்கள் தெரிந்தது. 50 ஓவர்கள் முழுமையாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. இந்த அணியில் அனைவரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்தனர் தேர்வாளர் ஸ்ரீகாந்த் உட்பட. League ஆட்டங்களில் இந்திய அணி முழுமையாக 50 ஓவர்கள் விளையாட முடியாதபோது , ஸ்ரீகாந்த் தலையிட்டு யூசுப் பதானுக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவை ஆடும் 11 இல் கொண்டுவந்தது தேர்வாளரின் கடமை அணியின் 15 வீரர்களை தேர்வு செய்வதோடு முடிந்து விடுவதில்லை , ஒவ்வொருவருக்கும் இந்திய அணி வெற்றி பெறவேண்டும் எண்ணம் உள்ளதை காட்டியது . தோனியும் ego எதுவும் பார்க்காமல் ரைனாவையும் , அஷ்வினையும் கொண்டுவந்தது அவரின் பிறர் குரலுக்கு மதிப்பு கொடுக்கும் பெருந்தன்மையை காட்டியது . நிச்சயமாக காலிறுதி மற்றும் அரையிறுதியில் இந்தியா மிகப் பெரிய மாற்றங்களை கண்டது . அதை கண்டுதான் இந்தியாவுடன் தோல்வி அடைந்த பாண்டிங்கும் , அப்ரிடியும் இந்தியாதான் கோப்பையை ஜெய்க்கும் என்றார்கள் . மேலும் தோனி சொன்னது போல இந்திய அணி இந்த உலக கோப்பையில் நன்கு பரிசோதிக்கப்பட்டது . chasing ஆனாலும் சரி defending ஆனாலும் சரி நன்கு பரிசோதிக்கப்பட்டது . மேலும் இந்தியாவிற்கான பாதையும் புற்கள் நிறைந்திருக்கவில்லை . உலகின் மிகச்சிறந்த அணிகளை வென்று இறுதி போட்டிக்கு வந்தது . அது ஆஸ்திரேலியாவாக இருக்கட்டும் , இந்த உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தானாக இருக்கட்டும் மிக கடினமான அணிகளையே வென்று வந்தது .


ஆனால் இலங்கைக்கு அப்படி இல்லை . அவர்களின் பாதை மிக சுலபமாக இருந்தது . League ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடனான அவர்கள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது . பாகிஸ்தானுடன் அவர்கள் தோற்று விட்டார்கள் . காலிருதியிலும், அரையிறுதியிலும் அவர்கள் இந்த உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்படாத இங்கிலாந்தையும் ,
நியூஜிலாந்தையும் வென்று வந்தார்கள் . அதுவும் அரையிறுதியில் நியூஜிலாந்துடன் அவர்கள் தடுமாறவே செய்தனர் . அவர்களுக்கு உண்மையான போட்டி இறுதியில் இந்தியாவுடன்தான் இருந்தது . மேலும் அவர்களது lower middle order சோதிக்கப்படவே இல்லை . இது அவர்களின் முன்னாள் வீரர்களை அதிகம் கவலை கொள்ளச் செய்தது .

மேலும் இந்தியாவின் மிகப் பெரிய பலம் தோனி. தோனியின் எந்த முடிவும் மிகத் துணிச்சலானது. போட்டியின் முடிவில் தோனி சொன்னது மிகச் சிறப்பானது. நான் இந்த போட்டியில் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தேன் ஒன்று அஷ்வினுக்கு பதிலாக ஸ்ரீசாந்தை எடுத்தது , அடுத்து மிகச் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கும் யுவராஜிற்கு பதிலாக இந்த தொடரில் நன்றாக விளையாடாத நான் 4 வது batsman ஆக இறங்கியது . நாங்கள் இந்த போட்டியை ஜெய்திருக்காவிட்டால் நிச்சயம் அனைவரும் அதை கேள்வி கேட்டிருப்பார்கள்.

மேலும் இந்த அணி 90 கள் மற்றும் 2000 களின் ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை . கடைசி வரை போராட வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கிறது . இலங்கையின் batting முடிந்தவுடன் பல வரலாறுகள் இந்தியாவிற்கு எதிராக இருந்தன . இதுவரை போட்டியை நடத்தும் அணி கோப்பையை ஜெய்ததில்லை, அதற்க்கு முன் நடந்த 9 உலக கோப்பைகளில் இரண்டாவதாக batting செய்த அணிகளில் 2 அணிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன . உலக கோப்பையின் இறுதி போட்டியில் சதம் அடித்தவர் இருந்த அணி தோல்வி அடைந்ததில்லை , மேலும் இலங்கை அணி முன்பு எதிர்பார்த்ததை விட மிக அதிக ரன்களை இறுதியில் எடுத்தது . மேலும் இலங்கையின் பந்துவீச்சும் மிகச் சிறப்பானது . இப்படி பல . மேலும் இந்த அணி முந்தி இருந்த அணி போல் பதற்றம் கொள்வதில்லை . இந்த தொடரில் மிகச் சிறப்பான தொடக்க ஜோடியான சச்சின் , சேவாக் ரன் எதுவும் எடுக்கும் முன்பே பிரிந்த போதாகட்டும், இந்த இறுதி போட்டியில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 18 ஆட்டம் இழந்து அணி 31/2 க்கு தத்தளித்த போதாகட்டும் இந்த அணி பதற்றம் கொள்ளவில்லை . சச்சின் போன பின் அணியே போய்விட்டது என்று எண்ணும் அணி அல்ல இது . காம்பிர் , கோலி போன்ற இளம் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தையும் , மிகச் சிறந்த பொறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தினர் . தோனி , கேப்டனாக இருந்து Lead in Front ஆக இருந்தது மிகச் சிறப்பான பொறுப்புணர்ச்சி. இறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இதற்க்கு முந்திய அனைத்து உலா சாம்பியன்களையும் இந்த உலக கோப்பையில் வெற்றி கண்டுள்ளது .



எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் . சச்சின் இந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினாலும் , தொடரின் இரண்டாவது அதிக ரன் எடுத்தவராக இருந்தாலும் சச்சின் இறுதி போட்டியில் சோபிக்கவில்லை என்பது எனக்கு வருத்தம்தான் . நான் சச்சின் century of century இந்த இறுதி போட்டியில் அடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை , at least சச்சின் 50 ரன்களாவது எடுத்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும் . ஆனால் சச்சினின் பங்களிப்பை யாரும் குறை கூற முடியாது .

இந்தியாவிற்கு கடந்த 28 வருடங்களாகவும் , சச்சினுக்கு கடந்த 5 உலக கோப்பைகளாக கண்ணாம் பூச்சி காட்டிய உலக கோப்பை இறுதியில் இந்திய வசமானது மிகச் சிறப்பான தருணம் . ப்ரையன் லாராவிற்கு கிடைக்காதது , டான் பிராட்மேனுக்கு கிடைக்காத சிறப்பு சச்சினுக்கு கிடைத்துள்ளது . ஆம் சச்சின் இடம்பெற்ற அணி உலக கோப்பையை கைபற்றிவிட்டது . சச்சினின் மகுடத்தில் கிட்டத்தட்ட அனைத்து இறகுகளும் சேர்ந்து விட்டன .

We are the Champions. Yes We are the World .

Tuesday, March 29, 2011

R u guys having a TamilNadu ration card?

R u guys having a TamilNadu ration card?

Vs

DMK

DMK

DMK

ADMK

Laptop Pentium 13inch

Laptop linux 15.4 inch

Gas cylinder

Mixy

Grinder 1.5 litre

Grinder 2 litre

3cent land for poors

Green House for all poors

No Power cut

No power cut

2 sets of uniform with shoes

4set of uniform with 2 sets of shoes

Rs. 2000 for all college students for books

Rs. 1000-5000 for students for books

Rice 1 Rs

First 20Kg Rice free

Free bus pass for students

Free bus pass for students and Senior citizen

Insurance for seniors and poors

Family insurance

Maternity leave 1 year

Maternity leave 6 months

Maternity bonus 6000

Maternity bonus 12000

Sugarcane per ton 3000

Sugarcane per ton 2500

Pondicherry infra will be changed like France

Pondicherry tourism will be enhanced with 2000Crores

1000 litres of pure water to each family every month

600 litres of pure water to each family every month

Mobile hospitals per every 4 street

Mobile hospital per every 2 streets with a doctor and nurse

Marriage bonus 25000 with 6gram gold

Marriage bonus 25000 with 4gram gold

2 cows for poor family

A cow for all poor family

But we expect

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

For a family

By

Tamil Nadu Voters.

Saturday, February 5, 2011

தலயின் தலை! ஆச்சர்யப்படுத்தும் அஜித்!

தலயின் தலை! ஆச்சர்யப்படுத்தும் அஜித்!

சென்னையில் மங்காத்தா படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு
மும்பையில் என்பதால் விரைவில் மும்பை செல்ல திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. ஆனால் அஜித் அதிரடியாக பில்லா பாகம் இரண்டுக்கு தயாராகி விட்டார்!
பாவனா மாடர்ன் லுக்கில் படங்கள்

சிம்பு பிறந்தநாள் கொண்டாட்ட படங்கள்
சிம்பு பிறந்தநாள் கொண்டாட்ட படங்கள்

சீடன் தனுஷ் புதிய படங்கள்

சீடன் டிரெயிலர் வீடியோ
இளையராஜாவின் அய்யன் திரைப்பட பாடல்கள் கேட்பதற்கு
சீடன் ஆடியோ லாஞ்ச் படங்கள்

மைனா ஹீரோ வித்தார்த் நடிக்கும் புதிய திரைப்பட படங்கள்

சமந்தாவின் புதிய படங்கள்
நடிகர் கார்த்திக்கின் பால்டிக்ஸ் பார்ட்டி படங்கள்
ஸ்ரேயா சரண் கிளாமர் போட்டோ சூட்
ஆடுபுலி புதிய திரைப்பட படங்கள்
ரஜினியைபோல உண்மையை மறைக்காமல் தனது சுய தோற்றத்தோடு வெளியே வருபவர் அஜித்.மங்காத்தா யூனிட்டில் அஜீத், டைரக்டர் வெங்கட் பிரபு என பலரும் தங்கள் ஆப்பிள் ஒயிட் தாடியுடன் காணப்படுகிறார்கள்.
வெஸ்டர்ன் நாடுகளில் அங்கே தாடிகளில் ஒயிட் எட்டிப்பார்த்தால் முன்பெல்லாம் ரெட் அல்லது கோல்ட் கலரிங் செய்து கொள்வார்கள். இப்போது கலரிங் எதுவும் செய்யாமல் அப்படியே ஒயிட்டாக விட்டுவிடுவதுதான் இப்போது அங்கேயும் ஃபேஷன்.
இந்த ஃபேஷன் இப்போது அஜீத் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது. எத்தனை தல ரசிகர்கள் கருப்பு தாடியிலும் தலைமுடியிலும் வெள்ளை நிறத்தை பூசிக்கொள்வார்களோ? மங்காத்தா படத்திலும் த்ரிஷாவுடன் நடிக்கும் காட்சிகளில் இப்படி தனது நரைத்துப் போன முடி மற்றும் தாடியுடன் வருகிறாராம் அஜித்! தலயோட தைரியமே தனிதாம்பா!

Monday, January 24, 2011

Yuvan Shankar Raja Copy

அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்

அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்


நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.

இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! 

இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!
 
கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை உழைப்பிற்கான ஒய்வை! பாதைக்கான ஒளியை!ஆண்டவனின் கருணை என்றும் முடிவில்லாதது. அது நிரந்தரமானது!
இந்தச் சக்தி உங்களுடைய லட்சியங்களை எட்டுவதற்கும் கனவுகளை நனவாக்குவதற்கும் உதவி செய்யும்.


சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது, தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.


தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.


நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.


பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள்.
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே  உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.

காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!

கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.

வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு! 

அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!

நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உணைமையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.
தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு. 


தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!


நமது ஆரோக்கியத்திற்கு கஷ்டங்கள் அவசியம் தேவை! நமது உடலுக்குள்ளேயே நல்ல விதமான உணர்வு பூர்வ சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாவிட்டால் வெற்றியடைந்த பிறகு அதை அனுபவித்து மகிழ்ச்சியடைய முடியாமல் போய்விடும். என்பதை நாம் உணர வேண்டும்!

வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.


தேவையான அளவிற்கு சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் அதிகாரமும் உடைய ஒரு தலைவரால்தான் தமது அணியை வழிநடத்திச் செல்லும் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இயலும்.


வேலைநாட்களில் அன்றாட கூச்சல், குழப்பம் சந்தடியெல்லாம் அடங்கியதும் ஆற, அமர சிந்தித்து அடுத்து வரப்போகும் புத்தம் புது நாளை எதிர்கொள்வதற்கு உன்னை நீ செம்மையாகத் தயார் செய்து கொண்டால் எதிர்காலத்தில் நீ வெற்றிகரமான தலைவர்தான்!


எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவர்ம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்!

கால எல்லையைத் தவிர வேறு எந்த வித்த்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.

சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும், தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தை எந்த தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது.

ஒருபக்கம் இருநூறு முன்னூறு ஹீரோக்கள்; மறுபக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நாறு கோடி மக்கள்! இது மாற்றப்படவேண்டிய நிலவரம்.

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்!
abdul_kalam

Thursday, January 13, 2011

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

உழைத்த உழவனுக்கும்
களைத்த கால்நடைகளுக்கும்
கொதித்த கதிரவனுக்கும்
உளமார்ந்த நன்றிகளை
உரித்தாக்கும் பொங்கல்...!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்




Tuesday, January 11, 2011

இப்படியாய் என் காதல்…




















கம்பிக்குள்
ஓடும்
மின்சாரம் போன்றதோ,
கம்பிக்கு வெளியே
ஓடும்
காற்றைப் போன்றதோ தான்
என் காதல்.
கருவிகளின்
இசைவுகளிலோ,
இலைகளின்
அசைவுகளிலோ
உணர்ந்து கொள்ள வேண்டும்
அதன் இருப்பை.
என்னால்
காட்ட முடியாது
ஒரு பிடி காற்றையும்
கால் கிலோ
மின்சாரத்தையும்.

பெத்த கடன்.


முதுமைச் சுருக்கங்கள்
விலக்க இயலா
வறுமைக்கோடுகளாய்
விளைய,
மளிகைக் கடைக்
கடனோடும்,
காய்கறிக் கடைக்
கடனோடும்,
வீதிமுனை வரை
நீண்டிருக்கும்
வட்டிக் கடைக் கடனோடும்,
அவமானத் துண்டால்
முகம் மறைத்து
வீட்டில் வரும் தந்தையிடம்
‘எங்களுக்கு என்ன செஞ்சே’
எனக்கேட்கும்
பெத்த கடன்.

Wednesday, January 5, 2011

வாழ்கையில்   உன்னோடு கைகோர்த்து !!
வாழ்ந்து  பார்க்கவே  ஆசைபடுகிறேன் .........
நீ தான் என் வாழ்கையின்
முதலும்  முடிவும்மானவள்!
உன்னால் நான் சிறப்பாக வாழவேண்டும்
நான் வாழ்ந்தால்.........
உன்னை சிறப்பாக பார்த்துகொள்வேன்!
எல்லாம் உணகவே!!!!!!!

இதுதான் அஜித்குமார் ....

இதுதான் அஜித்குமார் ....




இந்தப் பதிவை எழுதுவதால் நான் அஜித்திற்கு பிரசாரப்பீரங்கி என்ற முடிவுக்குவந்துவிடவேண்டாம் 

ரஜினி,கமல் என்ற இரு சாதனை சிகரங்களுக்குப் பின் அடுத்த தலைமுறை முன்னணி நடிகர்கள் பட்டியலில் தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கடும்போட்டி நிலவியது.அப்போது முன்னணியிலிருந்த பிரஷாந்த்,விஜய்,அஜித் ஆகியோருக்கிடையே நடைபெற்றுக்கொண்டிருந்த போட்டி 2000 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் பிரஷாந்த் பின்னடைவைச் சந்திக்க விக்ரம்,சூர்யா என்போர் போட்டியில் இணைய இன்றுவரை ரஜினி கமல் தங்களிடத்தில் இன்னும் சிம்மாசனமிட்டுள்ளனர் என்பது வேறுகதை. 

ஆனால் சினிமாவின் எந்தவொரு பின்னணியில்லாமல் நடிக்கவந்து சினிமாத்துறையில் தொடர்ந்தும் தனக்கெனவொரு இடத்தை தக்கவைத்திருப்பது சாதாரணவிடயமல்ல,அமராவதி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் அஜித்.காதல்நாயகனாக வலம்வந்துகொண்டிருந்த அஜித் ஆரம்பகாலங்களில் அதிகமான பெண்ரசிகைகளைக் கொண்டவராகவிருந்ததால் காதல்,குடும்ப படங்களிலேயே நடித்திருந்தார்,அதன்பின்னர் சரணின் இயக்கத்தில் நடித்த அமர்க்களம், முருகதாசின் தீனா போன்ற படங்களின் மூலம் ஆக்ஷன்ஹீரோவாக புதிய பரிமாணம் எடுத்து அதிலும் வெற்றிபெற்றார்.இன்றுவரை ஒரு மாஸ் ஹீரோவாக முன்னணியிலிருப்பதுடன் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ஓபனிங் உள்ள நடிகராகவும் விளங்குகிறார். 

இப்போது நான் கூறவந்தது அஜித்திற்கும் மிடியாக்களுக்கும் இடையிலான உறவுபற்றி,இது அனைத்து மிடியாக்கள் பற்றியுமல்ல,தொப்பி பொருத்தமானவர்களுக்கே...... 



இன்டர்நெட்,ப்ளாக்,எலக்ட்ரோனிக் மீடியாக்கள் என்பன இப்போதுதான் பிரசித்தம்,முன்னர் பிரிண்ட் மிடியாக்களும் தொலைக்காட்சிக்களும்தான் எல்லாமும்.அந்தக் கால கட்டத்தில் அஜித் வார இதழொன்றுக்கு வழங்கிய தனது "சூப்பர் ஸ்டார்" பற்றிய பேட்டி மூலம் பலரின் விமர்சனங்களுக்கும் ஆளானார், அஜித் தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று கூறினாலும் மீடியாக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் இல்லை. சரி அஜித் அப்படித்தான் முதலில் கூறியிருந்தாலும் பின்னர் அப்படி கூறவில்லை என்று சொன்ன பின்பாவது விட்டிருக்கலாமல்லவா? ஆனால் தொடர்ந்தும் ரஜினி ரசிகர்களிடமிருந்து அஜித்தை பிரிக்க இதை ஒரு துரும்புச்சீட்டாக சில ஊடகங்கள் பயன்படுத்திவந்துள்ளன. 

அதன் பின்னர் அவர் மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்தே வந்தார்,இதனால் ஆளாளுக்கு தாங்கள் விரும்பியதை எழுத ஆரம்பித்தனர்,அஜித்தான் எந்த பதிலோ மறுப்போ சொல்லமாட்டாரே இது போதாதா இவர்களுக்கு? அஜித் எங்காவது ஏதாவது கூறினால் உடனே அதனை திரிபுபடுத்தி புதுஅர்த்தம் கற்பிக்க ஒரு கூட்டமே ஆயத்தமாயிருந்தது. இன்டர்நெட்,ப்ளாக்,எலக்ட்ரோனிக் மீடியாக்கள் ஆதிக்கம் அதிகமானபின் ஒவ்வொரு நடிகர்களுக்கும் சார்பானவையாக இவை செயல்பட ஆரம்பித்தன.அஜித்தின் போட்டி நாயகர்களின் சார்பு ஊடகங்கள் இதில் முன்னணி வகித்ததென்றால் அது மிகையல்ல,குறிப்பாக ஒரு தொலைக்காட்சி குடும்பமும்,அவர்களது பத்திரிகைகளும் அஜித்தின்படங்கள் நன்றாக ஓடினாலும் அதுபற்றி கண்டுகொள்ளாமல் ஒருசில நடிகர்களின் தோல்வி படங்களைக்கூட வெற்றிப்படங்களாக சித்தரித்திருந்தன. 

அண்மையில் அஜித் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் "எனக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட்களே இல்லை,எனது ப்ளாக்பஸ்டர் படங்கள் சூப்பர்ஹிட்,சூப்பர்ஹிட்கள் எல்லாம் ஹிட்கள்,ஹிட்கள் எல்லாம் அவரேஜ்,அவறேஜ்கள் எல்லாம் ப்ளாப்,இந்த ரகசியம்தான் எனக்கு விளங்கவில்லை" இது நூற்றுக்கு நூறு உண்மை,தமதுபடங்களை வெற்றியென்று அடுத்தநாளே அறிவிப்போர் மத்தியில் அஜித் பாராட்டப்படவேண்டியவரே,ஏனெனில் அஜித் எந்தப் படத்திற்கும் வெற்றியென உரிமை கோருவதில்லை. 



மற்றைய நடிகர்கள் போல படத்தை வெளியிட்டுவிட்டு கூவி விற்க இவர் தொலைக்காட்சிகளுக்கு ஓடித் திரிவதில்லை.பில்லா படம் வெளிவருவதற்கு முன் பல ஆண்டுகளுக்குப் பின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்,அதற்காக வஞ்சகமின்றி அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் ஒரு பேட்டி வீதம் கொடுத்திருந்தார்,அதன்பின் இன்னமும் சின்னத்திரைப்பக்கம் அஜித் 'தல'காட்டவில்லை. 

ஆனாலும் ஒரு முன்னணித் தொலைக்காட்சி அஜித் படங்களை தோல்வி ஆக்க கடுமையாக உழைக்கும்.டாப் டென் படங்கள்,பாடல்கள் என்பவற்றில் இயலுமானவரை அஜித் படங்களை பின் வரிசையில் போட்டு படத்தின் மீதான பார்வையைக் குறைத்துவிடுவதோடு விமர்சனம் என்ற பெயரில் ஏதேதோ கூறி படத்தை வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருப்பார்கள். அஜித் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இவர்களின் கலையகத்துக்கு வந்து பேட்டி கொடுத்திருந்தாலோ,இவர்களின் தொலைக்காட்சிக்கு நன்றி கூறியிருந்தாலோ டாப் டென்னில் முதலிடம் கிடைத்திருக்கும்.அல்லது தனது படத்தின் ஒளிபரப்பு உரிமையை இவர்களுக்குக் கொடுத்திருந்தாலோ அஜித் புராணம் பாடப்பட்டிருக்கும். 

இவற்றில் எதுவுமே அஜித் செய்யாததுதான் இவர்களுக்கு அஜித் பிடிக்காமல் போனகாரணம்.அதுவும் இவர்கள் அதற்குப் பயன்படுத்தும் டெக்னிக் இருக்கிறதே,போட்டி நடிகரின் படமொன்றுடன் அஜித் படம் ரிலிஸ் ஆகினால் அஜித் படத்திற்கு கண்டிப்பாக மூன்றாவதிடம்தான்.கூடவந்த ஒரு டப்பா படத்திற்கு இரண்டாமிடம்,அல்லது ஏலவேவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் இரண்டாமிடத்தை பிடிக்கும்,இதை உண்மையென்று நம்பி ஞாயிறுகாலை தொலைக்காட்சிக்கு முன்னிருந்த காலங்களுமுண்டு.இப்போதான் இவர்களின் டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கே.... 



அந்த முக்கிய தொலைக்காட்சி இப்போது கடைசியாக விஷாலின் படமொன்றை வாங்கி அசலுடன் போட்டிக்கு இறக்க திட்டமிட்டுள்ளதாக பேச்சு,என்னதான் விளம்பரம் செய்தாலும் ஒரு படத்தின் ஒபநின்கை அதிகரிக்க முடியுமேயன்றி படத்தின் தலைவிதியை மாற்றியமைக்க முடியாது.அயன் தவிர இவர்கள் வாங்கி வெளியிட்ட எல்லாப் படமும் இரண்டாம் வாரத்துடன் குப்புற விழுந்தது இதற்கு சான்று.ஆனாலும் கிங் ஒப் ஒபெநிங்(King Of Opening ) அஜித்திற்கு முன் இவர்களின் விளம்பரம் எவ்வளவு கை கொடுக்கும் என்று தெரியவில்லை,அதன் பின் இவ்விரண்டு படங்களின் தரத்தை பொறுத்தது இவற்றின் வெற்றி. 

இதனைத் தான் அசல் ஆடியோ ரிலிசிலும் அஜித் கூறியிருந்தார் "நல்ல படைப்புகளுக்கு விளம்பரம் அவசியம் இல்லை" என்று .ஆனால் மறுநாள் ஒரு இணையத்தளத்தில் செய்தி வந்திருந்தது."என் படங்களுக்கு விளம்பரம் அவசியம் இல்லை " என்று.இப்படித்தான் அஜித் கூறும் அனைத்துக்கும் வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. 

இதே போன்றே அண்மையில் தனது பெயருக்கு முன்னால் வரும் பட்டப்பெயரை (அல்டிமேர் ஸ்டார் ) போடவேண்டாம் என்று அஜித் கூறியதை ஒரு முக்கிய சினிமா இணையத்தளம் "அஜித் ஜோதிடரின் பேச்சை கேட்டே இவ்வாறு கூறியுள்ளார்" என்றும்,முன்பு அஜித் பட்டப்பெயர் போடாத காலங்களில் அதிக வெற்றி கிடைத்ததால் மீண்டும் பட்டப்பெயரை போடாமல் விடப்போகின்றார் என்றும் பிளேற்ரை மாற்றிப்போட்டன. நம் தலைவலி ரசிக சிகாமணிகளுக்கு  இது போதாதா? உடனே சித்து வேலையே ஆரம்பித்து விட்டார்கள். இவர்களிடமிருக்கும் கெட்டபழக்கம் என்னவென்றால் தமது தலைவனுக்கு நல்லபுத்தி வரவேண்டும் என்று நினைப்பதில்லை அதற்க்கு மாறாக மற்றவர்களுக்கு வரும் நல்லபுத்தியையும் சாக்கடை ஆக்குவதுதான் இவர்களது வேலை , இவர்கள் தலைவன்தான் சாக்கடை முன்னாலே சத்தமாக பேசுபவராச்சே... 

எது எப்படியோ மனதில் பட்டதை கூறிவிட்டு,நடிப்பு என்பதை தொழிலாக மட்டும்பார்த்துக் கொண்டிருக்கும் 'தலை'க்கு