Wednesday, December 29, 2010

சென்றுவா ..............2010 தே,

சென்றுவா ..............2010 தே,
நீ இருந்த வரை நான் உன்னை 
கண்டுகொள்ளவில்லை 
ஆனால் இன்று நீ போகிறாய் 
என்றதும்  மனம் 
நான் உன்னுடன் இருந்த 
நாட்களை நீனைத்து ஏங்குகிறது ..........
இனி அந்த நாட்கள் 
திரும்பும?
உருண்டோடும்  வாழ்கையில் ............
நீ வந்ததும் தெரியவில்லை ...........
நீ போன பின் நீ ஏற்படுத்திய 
கால சுவடுகள்  மட்டும், 
என் நெஞ்சில் நீங்காமல் 
தினம் உன்னை நீனைத்து கொண்டுயிருப்பேன் 
என் நெஞ்சை விட்டு நீங்க 2010 .............
சென்றுவா...................

Friday, December 24, 2010

உன்னால் மட்டுமே

http://wallpaperdisk.com/wallpapers/Love-and-Romance/love%20paintings.jpg
 
உன்னால் மட்டுமே
என் அருகில்
உறங்கிக்கொண்டே
கனவில் வர முடியும்....

உன்னால் மட்டுமே
என் கண்ணீரிலும்
இன்பம் உணர்த்த முடியும்....

உன்னால் மட்டுமே
என் கவலையில்
இதம் கொடுக்க முடியும்.....

உன்னால் மட்டுமே
என் வாழ்விற்கு
வரம் தர முடியும்....

உன்னால் மட்டுமே
என் சாவிற்கும்
பொருள் சொல்ல முடியும்....

உன்னால் மட்டுமே
என் காதலுக்கு
அமரம் அளிக்க முடியும்....

wat'll be ma life?

  aaaa
 
 
wat'll be ma life?
a walk on the kinfe?

will it be
two side burning candle
too hard to handle...?

will it be
a paper al alone in the air
that flies widout a care...

will it be
a light that appears so far
but cannot be reached ever...

al ma love go in vain
no one to heal ma pain....
I cry n cry in rain
and here u come to ruin...?

tel me how can I rest,
relax and enjoy the best...
widout your luv n care
it's impossible, I swear...

காதல் காலம்...

http://digestive.niddk.nih.gov/ddiseases/pubs/hirschsprungs_ez/images/pregnant.jpg
 
கருவுற்ற சேதிதனை
கணவா உனக்குரைத்த
கணம்தனிலே
கண்டுகொண்டேன்
காதல் இன்னதென்று....

கனவுக்குள்ளும்
கால்கள் தரைதொடாது
கனிவாய் தாங்கும்
கைகளிலே
கண்டுகொண்டேன்
காமம் பொய் என்று....

மசக்கையின் போதும்
மாதம் ஆன பின்பும்
மடியோடணைத்து
உறங்கச்செய்யும் உன்னில்
கண்டுகொண்டேன்
உறவே வரம் என்று....

குழந்தை உதைப்பதும்
குரல்கேட்டு அசைவதும்
கூடி உணர்ந்து
சிலிர்க்கையில்
கண்டுகொண்டேன்
தாய்மை உனக்குமென்று....

உன் கருவதனை
நான் சுமக்க
என் காயமதை
நீ சுமக்க
கர்ப காலம் முழுதும்
காதல் காலம் ஆகாதோ...

Friday, November 5, 2010

பாதைகள்

எத்தனை  பாதைகள்  
இருந்தாலும் 
அத்தனையும் நாம் போகும் 
ஊருக்கு போகாது ......
நாம் பயணத்தில்  ஆயிரம்  
ஆயிரம் பாதைகளை  கடந்தாலும்
நாம்  நமகென்று  
ஒரு பாதையை  உருவாகிக்கொள்ள வேண்டும்
நாம் வாழ்கை பாதை 
சரியான பாதையில்  சரியான பயணத்தை  
நோக்கி தான் செல்கிறதா  
என்பதை  உறுதிசெய்துகொள்ள  வேண்டும் 
பாதை மாறினால்  வாழ்கை மாறிவிடும் .......

உண்மை

உண்மை .....
நம் பேச்சில் மட்டும் அல்ல..........
நம்  மூச்சிலும்  கலந்து  இருக்க வேண்டும்
வெறும் வாய் வார்த்தைகளாக  இல்லாமல்
முடிந்த வரையில்  நாம் வாழ்க்கையில்
கடைசி  வரையில்  நம்மை நம்பியவருக்கு 
உண்மையாக இருக்க வேண்டும்

Thursday, October 28, 2010

தீபாவளி!

நீ மத்தாப்பு வெடிக்கும்
அழகில் எத்தனை இதயங்கள்
சிதறிப் போகிறது தெரியுமா?


போகிற போக்கில் ஓரப்பார்வை
வீசிச் செல்லும் உன் கண்களில்
இருக்கிறது ஒளி வீசும் தீபாவளி!

உன்னை பார்த்த நாள்
முதல் உன்னையே சுற்றும்
சங்கு சக்கரமாய் ஆனேன் நான்...


தீபாவளியன்று புது தாவணியோடு
உன்னை பார்த்ததை விட சிறந்த
சிறப்பு நிகழ்ச்சியை நான் வேறு
எந்த தொலைக்காட்சியிலும் பார்க்கவில்லை.

Friday, October 8, 2010

TRUE FRIENDS

 *** TRUE FRIENDS ***
 
 
Friend: calls your parents by mr. and mrs.
Best friend: calls your parents dad and mom. 
Friend: has never seen you cry 
Best Friend: has always had the best shoulder to cry on   
Friend: never asks for anything to eat or drink  
 
Best friend: opens the fridge and makes herself at home  
 
Friend: asks you to write down your number.  
Best friend : they ask you for their number ( cuz they can't remember it)  
 
Friend: borrows your stuff for a few days then gives it back                    
 Best friend: has a closet full of your stuff

 
 
Friend: only knows a few things about you 
Best friend: could write a biography on your life  
Friend: will leave you behind if that is what the crowd is doing  
Best friend: will always go with you
 
Friend: would delete this letter  
Best friend: will send this back 
to me and all of their online buddies  

 
Friends Forever!  
 Written with a pen  
 
If you are my friend,  

 
Please answer this:  
 
Are we friends or are we not? yer
 
You told me once, but I forgot..  
 So tell me now and tell me true,  
 
So I can say , I am here for you.  
 
Of all the friends I've ever met,  
 
You're the ones I won't forget..  
 And if I die before you do,  
 
I'll go to Heaven  
And wait for you.  
Show your friends how much you care.
 
 Send this to everyone you consider a FRIEND, including the one who sent it to you. If it comes back to you, then you'll know you have a circle of friends.  
Ok,Friend  
Send this to.............  
1-2 people you are a Bad friend. Booo!!!  
3-5 people you are an OK Friend!  
4-6 people you are a Good friend!!
 
7-10 people you are a Awesome friend!!!
11-15 people you are a Fantastic friend!!!
20++ people you are the best of the best!!!

Wednesday, October 6, 2010

Monday, October 4, 2010

கதைக்களம்

கதைக்களம!

கனவுகளான   கதைக்களம்
கற்பனை  செய்து  பார்க்கமுடியாத  அளவுக்கு
நிஜத்தில் நடந்து முடிந்த ....
நிகழ்வுகளை  தினம் தினம் 
நினைத்துக் கொண்டியிருக்கும் ...
சராசரி  ஒரு மனிதனின்
உள்ள  குமுறல்கள்
நிலையில்லா உலகில் என்னை
படைத்த  கடவுளிடம்
காலத்தின் கோலத்தை
எதிர்த்து   போராடிகொண்டுயிருக்கும்
மனதின்  கனவுகள்  

Monday, September 27, 2010

உனக்குள் என்ன போராட்டம்

உனக்குள்  என்ன  போராட்டம் 
அன்பே !
உன்னை  இந்த நிலையில் 
பார்பேன் என்று
நான் நினைக்கவில்லை ...
உனக்குள் என்ன மன போராட்டம்
உன்னிடம் நிறைய மாற்றம்
நீ
நினைப்பது  எதுவாக இருந்தாலும்
என்னிடம்  சொல் ....
உன் மன போராட்டதிற்கு 
முற்று  புள்ளி வைக்கிறேன் .........  
என் வாழ்க்கையின்
பல பக்கங்களை  புரட்டி பார்த்தேன்
இது வரையில்
எல்லா சம்பவங்களும்
கண்ணீரில் முடிந்துபோயின
அப்படி முடிந்த
சில காயங்களில்  நான்
அதற்கு காரணமாக  இருந்திருப்பேன்

எது எப்படியோ  நான் கொண்ட
கருத்தில்  இருந்து
எபோதும் மாறியது  கிடையாது

என் கருத்துகள் அனைத்தும்
சரி என்று
எபோதும் நீனைததில்லை
காலம் எல்லா காயங்களையும்
மறக்க செய்யும்
ஆனால் சில நீனைவுகள்
 நம்மை  அதிலேயே
இருக்க நினைக்கும்

Friday, September 24, 2010

karannam

அன்பே !
என்னை  வெறுக்க  எத்தனையோ
காரணங்கள்  சொன்ன  உன்னால் ...
உன்னையே  உயிராக
நினைத்து கொண்டுயிருக்கும் ...
என்னை  விரும்புவதற்க்கு
ஒரு காரணம் கூடவா கிடைக்கவில்லை ..........    

Unmaiyai soll

உண்மையை  சொல் 
நீ ஏன் என்னை 
வெறுபைதை போல் நடிக்கிறாய் !
உன்னோடு  நான் இல்லாமல்  இருக்கலாம் 
ஆனால்.........
என்  நினைவுகள் எபோதும்  உன்னோடு மட்டுமே  
உறவாடிக்கொண்டு  இருக்கும் !!!

Monday, September 20, 2010

http://www.orkutbucket.com/wp-content/uploads/2008/12/babies-friends.jpg
பள்ளி போகும் வழியில்
பல்லில்லா பாட்டியிடம்
பனங்கிழங்கு வாங்கி தந்ததும்....

விடுமுறை தினங்களில்
கூட்டாஞ்சோறு பொங்கி
விளையாட்டாய் விருந்துண்டதும்...

சைக்கிள் சொல்லி தருவதாய்
சத்தியம் செய்து எனை
சேத்தில் விழ வைத்ததும்....

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு
பக்கம் பக்கம் அமர்ந்து
விடிய விடிய படித்ததும்....

கல்லூரி சேர்ந்தபின்
'என் உயிர் தோழன்' நீயென
அறிமுகம் செய்ததும்....

அரைக்காசு இல்லா நேரத்திலும்
'அதற்கென்ன விடு' என்று
ஆனந்தமாய் அலைந்ததும்....

பதிந்து போனது
பாவை மனதில்
பசுமரத்து ஆணி போல்....

மறந்து போகாது
மடியா நட்பு
மழையில் உப்பைப் போல்...

பட்டாம்பூச்சியாய்
நட்பு வளர்த்த நாட்களெல்லாம்
மட்கிப் போய் மறைந்துவிடுமோ
மணமாகிப் போன பின்....?

துள்ளி திரிந்த காலமெல்லாம் - ஒரு
துயரின்றி தொடராதோ...
அள்ளி அணைத்த நட்பு - நம்
ஆயுள் முழுதும் நீளாதோ....
புள்ளி வைத்து முடித்தாலும் - அது
தொடர்ச்சிப்புள்ளி ஆகாதோ....
 

Friday, September 17, 2010

What is true love

What is true love

True love is simply unconditional love. Unconditional love is love without conditions, without rules, without expectations, without judgment, without ego.

We are humans and we complicate things. We have been through difficult times and difficult relationships. Sometimes we are hurt and, as long as we can learn from our mistakes and move on, everything will be alright in the long run.

But we are human and we complicate things. We complicate love and its meanings. We also misuse the word.

A human may tell you that he will love you, if you change this one little thing. The one little thing becomes another little thing and another, until you find you are not the person you once were, all in the attempt to be loved. Why did that other human say he loved you, if really he wanted to change you? It is a complicated version of love that he has learned in his life. He feels that you should show love in a certain way, act a certain way, fit into certain roles that you cannot if you want to be true to yourself. Is that then true love? He will say it is.

Love with expectations cannot be true love.

The word love is also often misused. It can be used as an apology, an excuse, or as begging. How many times have you heard, "but, I love you!" Is this true love?

Unconditional love must first occur within yourself. You must be able to love yourself as you are, as you feel, as you believe, before you are able to share this unconditional love with another. You have to be strong in your love of self to be able to tell whether you are receiving true love from another. You have to learn to respect your own boundaries of what is good and right.

Look at your pets. They love you. Period. They love how you smell, they love what you do, what you eat, and how you do it. They want to be in the bedroom with you, in the bathroom with you, they want to walk down the hall with you. They still love you if you need to be alone for a little while. They love you when they are taking a nap, then they'll wake up for a little while and come and find you to make sure you are still alright. This is unconditional love. Pets do not judge you or expect anything from you. Pets do not have ego. They simply exist in the moment, ready to love and be loved.

True love exists within Spirit, within yourself, within your pets, and within other humans in your life. True unconditional love is beautiful and freeing.

friend

f you're lonely,
And need a friend,
And troubles seem like
They never end,
Just remember to keep the Faith,
And Love will be there to Light the Way.

Anytime you need a friend,
I will be here.
You'll never be alone again,
So don't you fear.
Even if you're miles away,
I'm by your side.
So don't you ever be lonely.
Love will make it alright.

When the shadows are closing in,
And your Spirit diminishing,
Just remember you're not alone,
And Love will be there,
To Guide you Home.

Thursday, September 9, 2010

நான்

நான் ...
நான் என்ற வார்த்தையை
சொல்லும் போதே  எதோ மனதில்
கர்வம்  பிறக்கிறது ...
ஆனால்!
அந்த நான் என்ற ஆணவம்
நம்மை ஒன்றும் இல்லாதவனாக ...
நம்மை யாரும் மதிக்கமல் போகும்
போது......
நாம் வாழுவதே  வீணாகிவிடும்
நாம் எபபோதும் நான் என்பதை மறந்து வாழுவோம்

Tuesday, September 7, 2010

நட்பாக மா(ற்)றிய காதல்..

நட்பாக மா(ற்)றிய காதல்.. 

மெதுவாய் புலரும் பனிக்கால
பொழுதாய் புலர்ந்தது
உனக்கும் எனக்குமான நேசம்!
குளிர் துடைக்கும் சூரியக்கதிர் போல்
விரிகிறது அதன் எல்லைகள்..


ரோஜா இதழ் போல்
முகிழும் உன் வார்த்தைகளும்
கொட்டும் அருவிபோல்
குதிக்கும் என் வார்த்தைகளும்
போஷித்து வளர்க்கின்றன
நம் நேசத்தை..


புன்னகையை
பகிர பலர் இருந்தாலும்
கண்ணீரை உனக்காய் மட்டுமே
சேமிக்கின்றேன்..


துணையா..!!! இணையா..!!!
என என்னிதயம்
கண்ணாமூச்சி ஆடும்போதெல்லாம்
எல்லைகளை சுட்டி
தெளிய வைக்கிறாய்!


மலர்ந்து மணம் பரப்பும்
மலரை விட
வெடித்து பரவும் விதையே
மண்ணிற்கு தேவையென்பதை
உணர வைத்த உனக்கு
காதல் தாண்டிய
என் நட்பை
காணிக்கையாக்குகிறேன்!


நமக்கிடையில் எல்லைகளும்
வேலிகளும் இருந்தாலும்

பகிர்தலும்.. புரிதலுமாய்..
தேடலும்.. தெளிதலுமாய்...
தொடரட்டும் நம்

நட்பாக மா(ற்)றிய காதல்..

கனவுகளை காப்பாற்ற

கனவுகளை காப்பாற்ற

கனவுகளே காணத் தெரியாமல்
இருந்த காலமுமுண்டு.
ஆசை துகள்களாக ஆரம்பித்து
கனவுகளாக உருவெடுத்தது.
கனவுகள் காலப் போக்கில்
லட்சியங்களாக மாறிக்கொண்டது.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின்
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது.
.
.
.
பல இன்பங்களை விட்டுக்கொடுத்து
எண்ணங்களை மாற்றியமைத்து
உடலை காயப்படுத்தி
உணர்வுகளை ஒருமுகப்படுத்தி
சொந்தங்களை தூரதள்ளி
நம்பிக்கையை தன்வசப்படுத்தி

என் சிந்தனைக்கு மட்டும் மதிப்பளித்து
வளர்ந்த பாதைக்கு முற்றுப்புள்ளியிட்டு
.
.
.
மீண்டும் விதையாகி, வேருன்றி,
கிளையிடத் துவங்கிவிட்டேன்...

நீண்ட  நாட்களுக்கு  பின்
நான் எழத நீனைத்து எழுதுகின்றேன்
என்னவளை  நீனைத்து 
எழுத நீனைக்கும் போதே
என் எண்ணங்கள்  என்னை மீறி
என்னக்குள்  அடங்கமல் 

Saturday, August 21, 2010

உன்னோடு

நான்  எழுதநினைகிறேன்
என்னை பற்றி  அல்ல!
என் நினைவுகளில்  நிறைந்திருக்கும் 
உன்னை பற்றி .....
நான் வாழும் போதே
உன்னோடு  வாழ விரும்புகிறேன் !!
உன் நினைவுகளோடு அல்ல !!!

Tuesday, August 17, 2010

அடங்கவில்லை...! 

சீறும் சிங்கத்தின் சத்தம் கூட
சிறிது நேரம் அடங்கும்...!

கூவும் குயிலின் இசை கூட
இடையில் அடங்கும்...!

கரையும் காகம் கூட
காலைப்பொழுதோடு அடங்கும்...!

உன் நினைவால் என் உள்ளத்தில் எப்போதும்
அலைகள் அடங்காமல்
அலை பாய்ந்து கொண்டே இருக்கிறதடி...!

வாய் திற  


உன் மௌனம்

எந்த மொழி

விடைதெரியா கேள்வி

உன் காதலும்

உன் மௌனமும்

வாய் திற

தொடங்கும்

இல்லை

முடியும்

என் தொல்லையும் உன் காதலும்

en_pakkam_image1

உன் பாதையில்

எதை மிதிப்பது ? எதை தவிர்ப்பது ?

உன் பாதையில் விஷச்செடிகளா ?
நிறையக் காண்பாய்


எதை மிதிப்பது ?
எதை தவிர்ப்பது ?


உன்னை அளந்திடு
பாதை புரிந்திடு
செடிகள் புரியும்

சில சமயம்,
மிதிப்பதை தவிர்ப்பாய்
தவிர்ப்பதை மிதிப்பாய்


நின்று விடாதே
திரும்பிப் பார்


வந்த பாதை நீளம் தெரியும்
மேலும் ஒரு அடி சுலபம்
இதை அது உணர்த்தும்...

Saturday, July 31, 2010

முடியுமா? முயற்ச்சியுடன்....

ஆயிரம் ஆயிரம் காரணங்கள் உண்டு பெண்ணே
நான் உன்னை விரும்பியதற்கு!!

இதுவரையிலும் ஒரு காரணம் கூட தெரியவில்லையடி
நீ என்னை வெறுத்ததற்க்கு!!

என் இமைகள் மூடித்திறக்கும் நேரத்தில்
உன் திருமணம் நடந்ததாடி!!

ஏன் இன்னும் என் கண்கள்
உன் நிழல்களையாவது பார்க்கமுடியுமா?
என அங்கும் இங்குமாய் அலைபாய்கிறது!!!

என் உதடுகள் சொல்கிறது
அட மடைய அவளுக்கு திருமணம் ஆகிவிட்ட்தென்று!!
ஏன் இன்னும் என் இதயத்திற்கு
தெரியவில்லை!!! புரியவில்லை!!!

காலமெல்லாம் நான் உன்னை
பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்!!
என்று நான் உன்னோடு சொல்லியிருக்கிறேன்!!
அதற்காவா என் தெரு அருகே குடிவந்தாய்
உன் கணவனுடன்!!!!
ஆண்டுகள் இரண்டரை ஆகிவிட்டது
இன்னும் சில மாதங்களில் உன் குழந்தை
என்னை பார்த்தால் ”அங்கிள்” என்று சொல்லும்!!!
ஆனாலும் பெண்ணே !!
இன்றும் என்னோடு உன் நினைவுகள்..........!

உன்னை இப்போது கனவில் நினைப்பதை கூட
இந்த சமுதாயாம் ஏற்றுக்கொள்ளாது..........
அது இயற்க்கையின் நியதியே!!!!!

அதனால் பெண்ணே!!
உன்னை பற்றிய நினைவுகளை
சற்றே தூரத்தில் வைத்து பழக ஆரம்பித்திருக்கிரேன்.....

நினைவுகள் நிழல்களாக மாறி
உச்சி (நடுமதியம்) வெயிலின்!!
நிழல்களாக மாறுமா? என்று தெரியாது!!
இருந்தாலும் முயற்சிகிறேன்!!!!!!

நட்புக்குள் நாம்

நட்புக்குள் நாம்

பாலினம் மாற்றிக்கொண்டோம்
வார்த்தைகளில்
டேய் என்றேன் உன்னை
டீ என்றாய் என்னை

பெற்றோர் இட்ட பெயர்
ஓன்று
தோழி வைக்கின்றாய்
தினம் ஓன்று

மாடு ஆடு, கோழி குருவி,
பாம்பு பல்லி,
இத்தனை அழகாய் பெயர்கள்
சூட்டுவதில் நிகரிலார்

பேசிய வார்த்தைகளை
பேசிக்கொண்டே இருக்கிறோம்
பேசாத நிமிடங்களில்
நலம் விசாரிக்கின்றோம்

என் வீடு வாசல் தோட்டம்வரை
நலம் விசாரித்தவள்

ஒருவரிச் செய்தியைக்கூட
உள்ளம் தாங்காதவள்
உடன் அனுப்பிவைப்பால்
பிடிக்கவில்லையா என்று

பிடித்த உணவு முதல்
பிடிக்காத உறவுக்காரர்வரை
சொல்லிவிட்டோம்

கவிதை எழுதச்சொல்லி
மகிழ்கின்றாய் உனக்காய்
கவிதை எழுத உயிர்வரை
யோசித்துவிட்டேன்

உன்வார்த்தைகள் போலவே
உன்விருப்பங்களும்
ஐஸ்கிரீம் சாக்லெட்டாய்
இனிக்கின்றது

அன்பு பாராட்டுவதில்
அன்னையை மிஞ்சிவிட்டாய்
அறிவு ஒழுக்கம் புகட்டுவதில்
தந்தையை மிஞ்சிவிட்டாய்

நீ என் தோழியாய்
தோழனாய் நிழலாய்
நினைவாய்
ஓடிக்கொண்டிருக்கின்றாய்
என்னுள்

ஏமாற்றம்

எப்பொழுதும் திரும்பாதவள்
நேற்று திரும்பி என்
மனதில் பூக்கள் பூக்க செய்தால்

அந்த சில நொடிகளால்
என் மனது பட்டாம்பூச்சியாக மாறியது

அதே மகிழ்ச்சியில் இன்றும்
காத்திருந்தேன்

நேரம் கழிந்தது
கண்கள் கலைப்படைந்தது
இதயம் கனத்தது

திரும்பிவர மனம் இல்லாமல்
திரும்பி பார்த்தேன்
ஏமாற்றம்

மனதை விட்டுவிட்டு
உடல் மட்டும் வீடு வந்தது

என்னுயிர் காதலியே...!

என்னுயிர் காதலியே...! - காதல் கவிதை

என்னுயிர் காதலியே...! 

என்னுயிர் காதலியே!
உனைக்காதலித்த நாள் முதல்...
நான் காதலையே மறந்விட்டேன்!
காதல் மீதுல்ல வெறுப்பால் அல்ல...
உன் மீது நான் கொண்ட காதலால்...dhina!

Tamilachi - Agarathi - Singles

Friday, July 30, 2010

வைரமுத்துவின் கவிதைகள்

இறக்கமுடியாத சிலுவைகள்

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

Tamilachi - Agarathi - Singles

Wednesday, July 28, 2010

எங்கே விவசாயம் ?

விவாசாயம் விழுந்துவிடும் அபாயம்

கணினி மீது இருக்கும் கவனம்

காணி நிலத்தின் மீதும் தினமும் வரணும்

வயல்வெளிகள் எல்லாமே வீடுகள்

கட்டிவிட்டால்

வாய்க்கரிசிக்காக கூட கையேந்தும் நிலைமை வரும்

அரிசி விலை அதிகம் என என்னும் நெஞ்சம்

தங்கம் விலையை அரிசிவிலை மிஞ்சும்

சேற்றில் கைவைக்க ஆல் இல்லை இங்கே

நாளை சோற்றில் கைவைக்க

வயல்வரப்புகள் எங்கே

உனக்கு இன்று உண்டு உணவு

நாளை உணவு வெறும் பகல் கனவு

கணினி கண்ட அறிவு

விவசாயத்தை பேணிக்காக்க அளின்றி

ஏற்பட்ட சரிவு

கணினி ஆளும் உலகம்

வேண்டாம் அந்த நரகம்

காணி நிலத்தை நாளை இந்த உலகம் தேடுமே

பசி என்னும் நோயால் நாளை உலகம் வாடுமே

உயிரின் விலையறியா மனிதா

உன் உயிரை விட கணினி என்ன பெரிதா

கால்வயிற்று கஞ்சிக்காக கையேந்தும் துயரம்

நாளை தலைமுறை வரை தொடரும் இந்த

அவலம்

என் தோழா

இன்றே கவலை கொள்ளடா

விவசாயம் முக்கியம் என்று எண்ணுடா

Monday, July 26, 2010

தோழியின் தோல்வி கவிதை !!!

இறக்கப் பிறந்த இதயம் ஏனோ
துடிக்கத் துடிக்கின்றது
உன்னைக் காணும் பொழுதுகளில்

உயிர்க்கத் துடிக்கும் இதயம் ஏனோ
துடிக்க மறுக்கின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்

இமைக்க மறுக்கும்
விழிக(ளு)ள் சுமக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அழுது வடிக்க
அவையும் துடிக்கின்றன
உன்னைக் காணாத பொழுதுகளில்

இறக்கை முளைத்து
பறந்து வருகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

இறந்து பிறந்து
துடியாய் துடிக்கின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

வார்த்தைகள் வற்றிட
வறுமையில் தவிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

கண்ணதாசனை விஞ்சிடும்
கவிதைகள் கொட்டுதே
உன்னைக் காணாத பொழுதுகளில்

எதையோ சொல்லாது
ஏங்கியே நிற்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதனை வைத்தே
காவியம் வரைகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

ஆறடிச் சிலையொன்று
அசைவதாய் உணர்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

நூறடிச் சிற்பமாய்
நெஞ்சிலே கனக்கின்றாய்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சிரித்து நிற்பதை
பார்த்து ரசிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை நினைத்து நினைத்து
சிரித்தே அழுகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சொல்ல வந்ததை
சொல்லாது போகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை சொல்லிச் சொல்லியே
என் கண்ணாடி அழுகின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்

பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய !
எனக்கு மட்டும் உரிமை உண்டு உன்னை காக்க !!
மலரிடம் சொன்னது முள் !!!

விட்டு விலகும் நெஞ்சங்கள் எல்லாம் விடுதலை விரும்பிகள் என்றால்
விருப்பத்தை மறைத்துத்தான் விதைத்திருக்கலாமே!!!

கண்ணீரில் நீந்த வைத்த
கன்னி உன் கவிதைகளை
கண்டால்
பிரம்மனும் பிரம்மிப்பான் !!!
உன் காதல் கை கூட
புதுபிறவி ஒன்றை
அருள்விப்பான் !!!!
வாழ்த்துக்கள் தோழி !!!

என் கண்கள்

நீ
வரும் பாதையில்
வீழ்ந்திருந்த பூக்கள்
உன்
வரவுக்கு காத்திருந்து
பூத்துவிட்ட
என் கண்கள்

யாரறிவார் இவள் மனதை?

வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....

வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..

எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்
பொன்னகையில் பார்ப்பதை விட
புன்னகையில் பார்ப்பது என்னை
பகல் நேர பௌர்ணமிகளாய்
தோன்றியது சிலருக்கு ....

எனை நோக்கி அனுதாபம்
அடைந்த சில நட்புகளை
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்
காயம் கண்ட இதயமதை மீண்டும்
காயப்படுத்திய உறவுகளை இன்னும்
ஏற்கவில்லை என் மனம் ஏனோ?

காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...

மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்..

மனித மனங்களும் மரித்து விட்டது
இறைவனோ மௌனம் காக்கின்றான்
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....

பேதை இவள் பேதலிக்கின்றாள்
வரும் கால வாழ்வை எண்ணி
யாரறிவார் இவள் மனதை......

உன்னை நினைத்து துடிக்குமடி என் இதயம்


கனவுகளில் மலர்வதில்லை காதல்
இதயத்தில் மலர்வதே காதல்
இதயம் இறக்கும் வரை உயிரானவளே
உன்னை நினைத்து துடிக்குமடி என் இதயம்

நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.

தாய்-மகள், தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, தொழிலாளி-முதலாளி என்று எல்லா உறவுகளிலும் நட்பே வேண்டும். சக தொழிலார்களிடம் நட்பு பிற மொழியினரிடம் நட்பு பிற நாட்டவரிடம் நட்பு என்று அனைத்திலும் நட்பு இருந்தால்தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும்.
நட்பு என்பது ரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை அதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். நண்பர்களாய் இருந்த இருவர் ரத்த உறவுச் சகோதரர்களாய் ஆவதில்லை. ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அதுதான் அவர்களின் சகோதர உறவையும் நெடுநாளையதாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.
ஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவர்கள் அல்ல. அவர்களுக்கு இரு வழிகளில் நட்பு வர வழியிருக்கிறது. காதலர்களாய் ஆனபின் அல்லது கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஆகலாம். எப்படியாயினும் உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய் இருப்பது நட்புதான்.
ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே உறவாக இருந்தால், அதில் அவ்வப்போது விரிசல்தான் விழும். இருவருக்கும் இடையில் நட்பு என்பது உறவாக இருந்தால், அவர்களை அசைக்க எவராலும் இயலாது.
காதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக் காதல் நாலு நாளில் செத்துப் போகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தை உருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும் உயரத்திலேயே இருக்கும்.
வாழ்வின் அனைத்திற்கும் நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.
இரு தலைவர்களுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும். இரு மதத்துக்குள் நட்பு என்றால் அப்பப்பா... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்
நட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை! காதல் வந்ததும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம்! காதல்கூட நட்பை இழக்கச் செய்வதில்லை. கல்யாணம்தான் அதைச் சிலரிடம் செய்துவிடுகிறது. கணவன் மனைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இழந்துவிடுகிறார்கள் சிலர். அத்தனை பலகீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்கிறது என்றால் அது உண்மையான நட்பா? உண்மையான நட்பிருந்தால் உயிர் போகும்போதும் உறவு போகாது!
எல்லோரும் ”நல்ல நட்புடைய” நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும் தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்!

Wednesday, July 21, 2010

எங்கு கற்றுக் கொண்டாய்

சொன்னாலும்
சிரிப்பாய்!!!
என் கண்களைப் பார்
மென்மையாய் சிரிக்கும்
உன் முகம்
நீ இல்லாத
போதும்  கூட

எங்கு கற்றுக் கொண்டாய்
இப்படி
எல்லாவற்றுக்கும்
சிரிப்பதற்குHuh

உண்மை ஒன்று சொல்லிடவா?

009.gif 
 உண்மை ஒன்று சொல்லிடவா?

*************************

உன்னை நான்
எப்போ காதலித்தேன்
எதற்காய் காதலித்தேன்
எந்த நிமிடம் காதலித்தேன்
என்று
இன்றும் கூட
எனக்கு எதுவுமே தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

ஏன் காதலித்தாய்?
எதற்காய் காதலித்தாய்?
என்ற உன் வினாக்களுக்கு
எனக்கு விடையும் தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

நீ
என் மீது
கோபப்படும் நேரமெல்லாம்
நான் செத்துப் பிழைக்கிறேன்

அதனால்
ஒரு போதும்
என்மீது நீ கோபப்படாதே!

உன்னை நான் கேட்டால் - நீ
உன்னை எனக்காய்
தருவாயோ...?
இல்லையோ...?
அதுவும் தெரியாது.

ஆனாலும்
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!

என்னை நீ மறந்து விடாதே
ஏனென்றால்
உன் நினைவில்தான்
நான் இன்னமும்
என் பொழுதுகளை எல்லாம்
இன்பமாய்க் கழிக்கின்றேன்.

இப்போதெல்லாம்
நான் கண்மூடி
கனவுக்காய்க் காத்துக் கிடக்கிறேன்.

காரணம்
கனவிலாவது
என் காதலைச் சொல்லி விட.

அந்தச் சந்தோசமான
நினைவுகளினால்தானோ என்னவோ
என் வசந்தம்
இன்னமும் சாகாமல் இருக்கின்றன.

ஓ!...
என் மனத்திரை விலக்கி
என் மனம் திறந்து
உனக்கு
உண்மை ஒன்று சொல்லிடவா?

ம்... ம்...
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!

Wednesday, July 14, 2010

kavithaikal


இதை நீ படிக்கும்
நொடியில்
நான் எங்கு இருப்பேன்
என்றறியாவிட்டாலும்,
நிச்சயமாய் ஒன்று மட்டும்,
இப்பொழுதுகூட நீ
என் இதயத்தில்தான்
இருக்கிறாய்..!

*

இப்பொழுதே
என்னை காதலித்துவிடு,
இல்லையென்றால்
அடுத்த ஜென்மத்தில்,
இதற்கும் சேர்த்து
நிறைய
காதலிக்க
வேண்டியிருக்கும்..!

*

பழைய பள்ளிக்கூட
புகைப்படத்தில்,
இன்னும்
புதிதாகவே
இருக்கிறது
முதல்
காதலின் நினைவு..!

அன்றும் இன்றும் என்றும்
புதிதாகவே
இருக்கும்
அந்த முதல் நினைவு

*

நீ என்னுடன்
பேசிச்சென்றதை,
ஒட்டுக்கேட்டு விட்டு
அதை சத்தமாய்
சொல்லிக்கொண்டிருக்கிறது
- காலி வகுப்பறை..!

"எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை
தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"

*

"விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"

*

"இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"

*

கூந்தலின்
இருந்து பிரிந்த
ஒற்றை முடியென

சந்திப்பின் குறுகிய
வெளியில்
என் பிரியங்களைப்
பிரித்துக் காட்ட
அவகாசமேதுமின்றியே
நிகழ்ந்தது நம் பிரிவும்...

*
என்றாவது ஒருநாள்
நீ என்னைத் தேடி வந்தால்
எனக்காய் சாட்சி சொல்ல
தூக்கம் தொலைத்த இரவுகளும்
கண்ணீர் நனைத்த தலையணையும்
மிச்சமிருக்கும்....

ஆனால்...
அந்த நாளின் மகிழ்ச்சி தாங்க
நான் உயிரோடிருப்பேனா?

நீயில்லாத நாளில்...


நேற்றைய தினத்தில்
என்னுடனோ
எனக்கென்றோ
எவருமில்லை....

நானும் எவர் நினைவிலும்
சென்றிருக்கவில்லை...

நான்.. நான்.. நான்
மட்டுமேயிருந்தேன்

முற்றுப்புள்ளிகளற்ற
மெளனம் ஒன்று
நாள் முழுக்க
நீண்டபடியேயிருந்தது
முடிவற்று...

உன் வெற்றிடங்களை
எப்போதும்
நிரப்பிக் கொண்டிருப்பதாய்
உன்னால் சிலாகிகக்கப்பட்ட
என் சொற்களும் கூட
இலக்கற்று அலைந்து
மூடப்பட்ட உன் கதவுகளில் மோதி
உடைந்து திரும்பின..

உரக்கச் சத்தமிட்டு
ஓடித்திரியும் பிள்ளைகளாய்
என்னைச் சுற்றிவந்த
நினைவுகள் சிலவற்றில்
உன் பெயருமிருந்தது.

ஒருவேளை...

உன் பெயர் சொல்லிக்கொண்டு
துண்டு மேகமொன்றோ
சிட்டுக்குருவியொன்றோ
வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்
வெகுநேரம்...

தொலைவில்...
வானம் முடியும் ஒரு புள்ளியில்
நொடிக்கொரு வண்ணம் காட்டி
பிரித்தறிய முடியா நிறங்களை
என்முகத்தில் அள்ளித்தெளித்தபடியே

மிச்சங்கள் ஏதுமின்றி
மறைந்துபோனது பகல்
உன்னைப் போலவே....

உன்னை நினைத்து


உன்னை நினைத்து
இரவு முழுதும்
அழுது முடித்து
உறுதியாய்த்
தீர்மானித்தேன்
உன்னை மறந்து
விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழுதுகொண்டு
அழைத்துக்கொண்டு
கிளம்பினேன்...

திரையரங்கில்..
நூலகத்தில்..
புத்தக இடுக்கில்..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...

எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத்
திரும்பினேன்.

செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!

மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்

அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!
தவறு என்று எதை  நினைகிறோமோ

அது  தவறாக மட்டறவர்  கண்கலுக்கு
தெரியாது ....

நான் ரசித்த காதல் கவிதைகள் பாகம் 2

நீ என்னைக் காதலிக்கிறாயா என்பது புரியாத
அந்த ஆரம்ப நாட்களில் ... தெரியாத்தனமாக நீ அணிந்திருந்த உடையின்
வண்ணத்தில் என் சட்டையின் வண்ணம் இருந்ததைக் கவனித்த என் அயோக்கிய
நண்பன் ஒருவன் 'டேய் என்ன இரண்டு பேரும் ஒரே கலரில்...' கிண்டல்
செய்துவிட அப்போதே அவனைத் திட்டினேன் ... அவ்வளவு மகிழ்ச்சியாய்த்
திட்டமுடியுமா என்கிற ஆச்சரியத்துடன்.

அதன்
பிறகு அந்தச் சட்டையைப் போடவே கூச்சமாய்ப் போய் பெட்டியில் ஒளித்து
வைத்துவிட்டேன் ... என்று நான் இப்போது சொல்லிக்கொண்டிருக்கையில் நீ
முகத்தை மூடிக்கொண்டாய். ஏன் என்று கேட்டதற்கு ' நானும் அப்படித்தான்
ஒளித்து வைத்துக் கொண்டேன்' என்கிறாய்.

* கும்பலில் எல்லாம்

நீ போகாதே . . . யார் யாரோ மிதிக்கிறார்கள் உன் நிழலை.

* தொலைபேசியில்
எல்லாம்
நீ எனக்கு முத்தம்
தராதே அது உன் முத்தத்தை எடுத்துக் கொண்டு வெறும் சத்தத்தை மட்டுமே
எனக்குத் தருகிறது

*புவியின் ஈர்ப்பு
விசையில்
எப்போதாவது தவறி
விழுந்திருக்கிறேன். உனது விழியின் ஈர்ப்பு விசையில் எப்போதும் தவறாமல்
விழுந்துகொண்டிருக்கிறேன்.

*தெய்வமே..

உன்னை என் இதயத்திலிருந்து வெளியேற்றிவிட்டு. ஒரு பெண்ணைக்
குடிவைத்தற்க்காக கோபித்துக்கொண்டு என்னைக் கைவிட்டு விடதே!.. உன்னால்
தூ ணிலோ துரும்பிலோ கூட
வாசம் செய்யமுடியும். அவளால் முடியுமா?