Saturday, August 21, 2010

உன்னோடு

நான்  எழுதநினைகிறேன்
என்னை பற்றி  அல்ல!
என் நினைவுகளில்  நிறைந்திருக்கும் 
உன்னை பற்றி .....
நான் வாழும் போதே
உன்னோடு  வாழ விரும்புகிறேன் !!
உன் நினைவுகளோடு அல்ல !!!

Tuesday, August 17, 2010

அடங்கவில்லை...! 

சீறும் சிங்கத்தின் சத்தம் கூட
சிறிது நேரம் அடங்கும்...!

கூவும் குயிலின் இசை கூட
இடையில் அடங்கும்...!

கரையும் காகம் கூட
காலைப்பொழுதோடு அடங்கும்...!

உன் நினைவால் என் உள்ளத்தில் எப்போதும்
அலைகள் அடங்காமல்
அலை பாய்ந்து கொண்டே இருக்கிறதடி...!

வாய் திற  


உன் மௌனம்

எந்த மொழி

விடைதெரியா கேள்வி

உன் காதலும்

உன் மௌனமும்

வாய் திற

தொடங்கும்

இல்லை

முடியும்

என் தொல்லையும் உன் காதலும்

en_pakkam_image1

உன் பாதையில்

எதை மிதிப்பது ? எதை தவிர்ப்பது ?

உன் பாதையில் விஷச்செடிகளா ?
நிறையக் காண்பாய்


எதை மிதிப்பது ?
எதை தவிர்ப்பது ?


உன்னை அளந்திடு
பாதை புரிந்திடு
செடிகள் புரியும்

சில சமயம்,
மிதிப்பதை தவிர்ப்பாய்
தவிர்ப்பதை மிதிப்பாய்


நின்று விடாதே
திரும்பிப் பார்


வந்த பாதை நீளம் தெரியும்
மேலும் ஒரு அடி சுலபம்
இதை அது உணர்த்தும்...