Saturday, July 31, 2010

முடியுமா? முயற்ச்சியுடன்....

ஆயிரம் ஆயிரம் காரணங்கள் உண்டு பெண்ணே
நான் உன்னை விரும்பியதற்கு!!

இதுவரையிலும் ஒரு காரணம் கூட தெரியவில்லையடி
நீ என்னை வெறுத்ததற்க்கு!!

என் இமைகள் மூடித்திறக்கும் நேரத்தில்
உன் திருமணம் நடந்ததாடி!!

ஏன் இன்னும் என் கண்கள்
உன் நிழல்களையாவது பார்க்கமுடியுமா?
என அங்கும் இங்குமாய் அலைபாய்கிறது!!!

என் உதடுகள் சொல்கிறது
அட மடைய அவளுக்கு திருமணம் ஆகிவிட்ட்தென்று!!
ஏன் இன்னும் என் இதயத்திற்கு
தெரியவில்லை!!! புரியவில்லை!!!

காலமெல்லாம் நான் உன்னை
பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்!!
என்று நான் உன்னோடு சொல்லியிருக்கிறேன்!!
அதற்காவா என் தெரு அருகே குடிவந்தாய்
உன் கணவனுடன்!!!!
ஆண்டுகள் இரண்டரை ஆகிவிட்டது
இன்னும் சில மாதங்களில் உன் குழந்தை
என்னை பார்த்தால் ”அங்கிள்” என்று சொல்லும்!!!
ஆனாலும் பெண்ணே !!
இன்றும் என்னோடு உன் நினைவுகள்..........!

உன்னை இப்போது கனவில் நினைப்பதை கூட
இந்த சமுதாயாம் ஏற்றுக்கொள்ளாது..........
அது இயற்க்கையின் நியதியே!!!!!

அதனால் பெண்ணே!!
உன்னை பற்றிய நினைவுகளை
சற்றே தூரத்தில் வைத்து பழக ஆரம்பித்திருக்கிரேன்.....

நினைவுகள் நிழல்களாக மாறி
உச்சி (நடுமதியம்) வெயிலின்!!
நிழல்களாக மாறுமா? என்று தெரியாது!!
இருந்தாலும் முயற்சிகிறேன்!!!!!!

நட்புக்குள் நாம்

நட்புக்குள் நாம்

பாலினம் மாற்றிக்கொண்டோம்
வார்த்தைகளில்
டேய் என்றேன் உன்னை
டீ என்றாய் என்னை

பெற்றோர் இட்ட பெயர்
ஓன்று
தோழி வைக்கின்றாய்
தினம் ஓன்று

மாடு ஆடு, கோழி குருவி,
பாம்பு பல்லி,
இத்தனை அழகாய் பெயர்கள்
சூட்டுவதில் நிகரிலார்

பேசிய வார்த்தைகளை
பேசிக்கொண்டே இருக்கிறோம்
பேசாத நிமிடங்களில்
நலம் விசாரிக்கின்றோம்

என் வீடு வாசல் தோட்டம்வரை
நலம் விசாரித்தவள்

ஒருவரிச் செய்தியைக்கூட
உள்ளம் தாங்காதவள்
உடன் அனுப்பிவைப்பால்
பிடிக்கவில்லையா என்று

பிடித்த உணவு முதல்
பிடிக்காத உறவுக்காரர்வரை
சொல்லிவிட்டோம்

கவிதை எழுதச்சொல்லி
மகிழ்கின்றாய் உனக்காய்
கவிதை எழுத உயிர்வரை
யோசித்துவிட்டேன்

உன்வார்த்தைகள் போலவே
உன்விருப்பங்களும்
ஐஸ்கிரீம் சாக்லெட்டாய்
இனிக்கின்றது

அன்பு பாராட்டுவதில்
அன்னையை மிஞ்சிவிட்டாய்
அறிவு ஒழுக்கம் புகட்டுவதில்
தந்தையை மிஞ்சிவிட்டாய்

நீ என் தோழியாய்
தோழனாய் நிழலாய்
நினைவாய்
ஓடிக்கொண்டிருக்கின்றாய்
என்னுள்

ஏமாற்றம்

எப்பொழுதும் திரும்பாதவள்
நேற்று திரும்பி என்
மனதில் பூக்கள் பூக்க செய்தால்

அந்த சில நொடிகளால்
என் மனது பட்டாம்பூச்சியாக மாறியது

அதே மகிழ்ச்சியில் இன்றும்
காத்திருந்தேன்

நேரம் கழிந்தது
கண்கள் கலைப்படைந்தது
இதயம் கனத்தது

திரும்பிவர மனம் இல்லாமல்
திரும்பி பார்த்தேன்
ஏமாற்றம்

மனதை விட்டுவிட்டு
உடல் மட்டும் வீடு வந்தது

என்னுயிர் காதலியே...!

என்னுயிர் காதலியே...! - காதல் கவிதை

என்னுயிர் காதலியே...! 

என்னுயிர் காதலியே!
உனைக்காதலித்த நாள் முதல்...
நான் காதலையே மறந்விட்டேன்!
காதல் மீதுல்ல வெறுப்பால் அல்ல...
உன் மீது நான் கொண்ட காதலால்...dhina!

Tamilachi - Agarathi - Singles

Friday, July 30, 2010

வைரமுத்துவின் கவிதைகள்

இறக்கமுடியாத சிலுவைகள்

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

Tamilachi - Agarathi - Singles

Wednesday, July 28, 2010

எங்கே விவசாயம் ?

விவாசாயம் விழுந்துவிடும் அபாயம்

கணினி மீது இருக்கும் கவனம்

காணி நிலத்தின் மீதும் தினமும் வரணும்

வயல்வெளிகள் எல்லாமே வீடுகள்

கட்டிவிட்டால்

வாய்க்கரிசிக்காக கூட கையேந்தும் நிலைமை வரும்

அரிசி விலை அதிகம் என என்னும் நெஞ்சம்

தங்கம் விலையை அரிசிவிலை மிஞ்சும்

சேற்றில் கைவைக்க ஆல் இல்லை இங்கே

நாளை சோற்றில் கைவைக்க

வயல்வரப்புகள் எங்கே

உனக்கு இன்று உண்டு உணவு

நாளை உணவு வெறும் பகல் கனவு

கணினி கண்ட அறிவு

விவசாயத்தை பேணிக்காக்க அளின்றி

ஏற்பட்ட சரிவு

கணினி ஆளும் உலகம்

வேண்டாம் அந்த நரகம்

காணி நிலத்தை நாளை இந்த உலகம் தேடுமே

பசி என்னும் நோயால் நாளை உலகம் வாடுமே

உயிரின் விலையறியா மனிதா

உன் உயிரை விட கணினி என்ன பெரிதா

கால்வயிற்று கஞ்சிக்காக கையேந்தும் துயரம்

நாளை தலைமுறை வரை தொடரும் இந்த

அவலம்

என் தோழா

இன்றே கவலை கொள்ளடா

விவசாயம் முக்கியம் என்று எண்ணுடா

Monday, July 26, 2010

தோழியின் தோல்வி கவிதை !!!

இறக்கப் பிறந்த இதயம் ஏனோ
துடிக்கத் துடிக்கின்றது
உன்னைக் காணும் பொழுதுகளில்

உயிர்க்கத் துடிக்கும் இதயம் ஏனோ
துடிக்க மறுக்கின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்

இமைக்க மறுக்கும்
விழிக(ளு)ள் சுமக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அழுது வடிக்க
அவையும் துடிக்கின்றன
உன்னைக் காணாத பொழுதுகளில்

இறக்கை முளைத்து
பறந்து வருகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

இறந்து பிறந்து
துடியாய் துடிக்கின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

வார்த்தைகள் வற்றிட
வறுமையில் தவிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

கண்ணதாசனை விஞ்சிடும்
கவிதைகள் கொட்டுதே
உன்னைக் காணாத பொழுதுகளில்

எதையோ சொல்லாது
ஏங்கியே நிற்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதனை வைத்தே
காவியம் வரைகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

ஆறடிச் சிலையொன்று
அசைவதாய் உணர்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

நூறடிச் சிற்பமாய்
நெஞ்சிலே கனக்கின்றாய்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சிரித்து நிற்பதை
பார்த்து ரசிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை நினைத்து நினைத்து
சிரித்தே அழுகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சொல்ல வந்ததை
சொல்லாது போகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை சொல்லிச் சொல்லியே
என் கண்ணாடி அழுகின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்

பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய !
எனக்கு மட்டும் உரிமை உண்டு உன்னை காக்க !!
மலரிடம் சொன்னது முள் !!!

விட்டு விலகும் நெஞ்சங்கள் எல்லாம் விடுதலை விரும்பிகள் என்றால்
விருப்பத்தை மறைத்துத்தான் விதைத்திருக்கலாமே!!!

கண்ணீரில் நீந்த வைத்த
கன்னி உன் கவிதைகளை
கண்டால்
பிரம்மனும் பிரம்மிப்பான் !!!
உன் காதல் கை கூட
புதுபிறவி ஒன்றை
அருள்விப்பான் !!!!
வாழ்த்துக்கள் தோழி !!!

என் கண்கள்

நீ
வரும் பாதையில்
வீழ்ந்திருந்த பூக்கள்
உன்
வரவுக்கு காத்திருந்து
பூத்துவிட்ட
என் கண்கள்

யாரறிவார் இவள் மனதை?

வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....

வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..

எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்
பொன்னகையில் பார்ப்பதை விட
புன்னகையில் பார்ப்பது என்னை
பகல் நேர பௌர்ணமிகளாய்
தோன்றியது சிலருக்கு ....

எனை நோக்கி அனுதாபம்
அடைந்த சில நட்புகளை
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்
காயம் கண்ட இதயமதை மீண்டும்
காயப்படுத்திய உறவுகளை இன்னும்
ஏற்கவில்லை என் மனம் ஏனோ?

காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...

மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்..

மனித மனங்களும் மரித்து விட்டது
இறைவனோ மௌனம் காக்கின்றான்
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....

பேதை இவள் பேதலிக்கின்றாள்
வரும் கால வாழ்வை எண்ணி
யாரறிவார் இவள் மனதை......

உன்னை நினைத்து துடிக்குமடி என் இதயம்


கனவுகளில் மலர்வதில்லை காதல்
இதயத்தில் மலர்வதே காதல்
இதயம் இறக்கும் வரை உயிரானவளே
உன்னை நினைத்து துடிக்குமடி என் இதயம்

நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.

தாய்-மகள், தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, தொழிலாளி-முதலாளி என்று எல்லா உறவுகளிலும் நட்பே வேண்டும். சக தொழிலார்களிடம் நட்பு பிற மொழியினரிடம் நட்பு பிற நாட்டவரிடம் நட்பு என்று அனைத்திலும் நட்பு இருந்தால்தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும்.
நட்பு என்பது ரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை அதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். நண்பர்களாய் இருந்த இருவர் ரத்த உறவுச் சகோதரர்களாய் ஆவதில்லை. ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அதுதான் அவர்களின் சகோதர உறவையும் நெடுநாளையதாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.
ஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவர்கள் அல்ல. அவர்களுக்கு இரு வழிகளில் நட்பு வர வழியிருக்கிறது. காதலர்களாய் ஆனபின் அல்லது கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஆகலாம். எப்படியாயினும் உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய் இருப்பது நட்புதான்.
ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே உறவாக இருந்தால், அதில் அவ்வப்போது விரிசல்தான் விழும். இருவருக்கும் இடையில் நட்பு என்பது உறவாக இருந்தால், அவர்களை அசைக்க எவராலும் இயலாது.
காதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக் காதல் நாலு நாளில் செத்துப் போகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தை உருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும் உயரத்திலேயே இருக்கும்.
வாழ்வின் அனைத்திற்கும் நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.
இரு தலைவர்களுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும். இரு மதத்துக்குள் நட்பு என்றால் அப்பப்பா... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்
நட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை! காதல் வந்ததும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம்! காதல்கூட நட்பை இழக்கச் செய்வதில்லை. கல்யாணம்தான் அதைச் சிலரிடம் செய்துவிடுகிறது. கணவன் மனைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இழந்துவிடுகிறார்கள் சிலர். அத்தனை பலகீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்கிறது என்றால் அது உண்மையான நட்பா? உண்மையான நட்பிருந்தால் உயிர் போகும்போதும் உறவு போகாது!
எல்லோரும் ”நல்ல நட்புடைய” நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும் தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்!

Wednesday, July 21, 2010

எங்கு கற்றுக் கொண்டாய்

சொன்னாலும்
சிரிப்பாய்!!!
என் கண்களைப் பார்
மென்மையாய் சிரிக்கும்
உன் முகம்
நீ இல்லாத
போதும்  கூட

எங்கு கற்றுக் கொண்டாய்
இப்படி
எல்லாவற்றுக்கும்
சிரிப்பதற்குHuh

உண்மை ஒன்று சொல்லிடவா?

009.gif 
 உண்மை ஒன்று சொல்லிடவா?

*************************

உன்னை நான்
எப்போ காதலித்தேன்
எதற்காய் காதலித்தேன்
எந்த நிமிடம் காதலித்தேன்
என்று
இன்றும் கூட
எனக்கு எதுவுமே தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

ஏன் காதலித்தாய்?
எதற்காய் காதலித்தாய்?
என்ற உன் வினாக்களுக்கு
எனக்கு விடையும் தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

நீ
என் மீது
கோபப்படும் நேரமெல்லாம்
நான் செத்துப் பிழைக்கிறேன்

அதனால்
ஒரு போதும்
என்மீது நீ கோபப்படாதே!

உன்னை நான் கேட்டால் - நீ
உன்னை எனக்காய்
தருவாயோ...?
இல்லையோ...?
அதுவும் தெரியாது.

ஆனாலும்
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!

என்னை நீ மறந்து விடாதே
ஏனென்றால்
உன் நினைவில்தான்
நான் இன்னமும்
என் பொழுதுகளை எல்லாம்
இன்பமாய்க் கழிக்கின்றேன்.

இப்போதெல்லாம்
நான் கண்மூடி
கனவுக்காய்க் காத்துக் கிடக்கிறேன்.

காரணம்
கனவிலாவது
என் காதலைச் சொல்லி விட.

அந்தச் சந்தோசமான
நினைவுகளினால்தானோ என்னவோ
என் வசந்தம்
இன்னமும் சாகாமல் இருக்கின்றன.

ஓ!...
என் மனத்திரை விலக்கி
என் மனம் திறந்து
உனக்கு
உண்மை ஒன்று சொல்லிடவா?

ம்... ம்...
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!

Wednesday, July 14, 2010

kavithaikal


இதை நீ படிக்கும்
நொடியில்
நான் எங்கு இருப்பேன்
என்றறியாவிட்டாலும்,
நிச்சயமாய் ஒன்று மட்டும்,
இப்பொழுதுகூட நீ
என் இதயத்தில்தான்
இருக்கிறாய்..!

*

இப்பொழுதே
என்னை காதலித்துவிடு,
இல்லையென்றால்
அடுத்த ஜென்மத்தில்,
இதற்கும் சேர்த்து
நிறைய
காதலிக்க
வேண்டியிருக்கும்..!

*

பழைய பள்ளிக்கூட
புகைப்படத்தில்,
இன்னும்
புதிதாகவே
இருக்கிறது
முதல்
காதலின் நினைவு..!

அன்றும் இன்றும் என்றும்
புதிதாகவே
இருக்கும்
அந்த முதல் நினைவு

*

நீ என்னுடன்
பேசிச்சென்றதை,
ஒட்டுக்கேட்டு விட்டு
அதை சத்தமாய்
சொல்லிக்கொண்டிருக்கிறது
- காலி வகுப்பறை..!

"எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை
தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"

*

"விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"

*

"இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"

*

கூந்தலின்
இருந்து பிரிந்த
ஒற்றை முடியென

சந்திப்பின் குறுகிய
வெளியில்
என் பிரியங்களைப்
பிரித்துக் காட்ட
அவகாசமேதுமின்றியே
நிகழ்ந்தது நம் பிரிவும்...

*
என்றாவது ஒருநாள்
நீ என்னைத் தேடி வந்தால்
எனக்காய் சாட்சி சொல்ல
தூக்கம் தொலைத்த இரவுகளும்
கண்ணீர் நனைத்த தலையணையும்
மிச்சமிருக்கும்....

ஆனால்...
அந்த நாளின் மகிழ்ச்சி தாங்க
நான் உயிரோடிருப்பேனா?

நீயில்லாத நாளில்...


நேற்றைய தினத்தில்
என்னுடனோ
எனக்கென்றோ
எவருமில்லை....

நானும் எவர் நினைவிலும்
சென்றிருக்கவில்லை...

நான்.. நான்.. நான்
மட்டுமேயிருந்தேன்

முற்றுப்புள்ளிகளற்ற
மெளனம் ஒன்று
நாள் முழுக்க
நீண்டபடியேயிருந்தது
முடிவற்று...

உன் வெற்றிடங்களை
எப்போதும்
நிரப்பிக் கொண்டிருப்பதாய்
உன்னால் சிலாகிகக்கப்பட்ட
என் சொற்களும் கூட
இலக்கற்று அலைந்து
மூடப்பட்ட உன் கதவுகளில் மோதி
உடைந்து திரும்பின..

உரக்கச் சத்தமிட்டு
ஓடித்திரியும் பிள்ளைகளாய்
என்னைச் சுற்றிவந்த
நினைவுகள் சிலவற்றில்
உன் பெயருமிருந்தது.

ஒருவேளை...

உன் பெயர் சொல்லிக்கொண்டு
துண்டு மேகமொன்றோ
சிட்டுக்குருவியொன்றோ
வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்
வெகுநேரம்...

தொலைவில்...
வானம் முடியும் ஒரு புள்ளியில்
நொடிக்கொரு வண்ணம் காட்டி
பிரித்தறிய முடியா நிறங்களை
என்முகத்தில் அள்ளித்தெளித்தபடியே

மிச்சங்கள் ஏதுமின்றி
மறைந்துபோனது பகல்
உன்னைப் போலவே....

உன்னை நினைத்து


உன்னை நினைத்து
இரவு முழுதும்
அழுது முடித்து
உறுதியாய்த்
தீர்மானித்தேன்
உன்னை மறந்து
விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழுதுகொண்டு
அழைத்துக்கொண்டு
கிளம்பினேன்...

திரையரங்கில்..
நூலகத்தில்..
புத்தக இடுக்கில்..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...

எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத்
திரும்பினேன்.

செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!

மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்

அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!
தவறு என்று எதை  நினைகிறோமோ

அது  தவறாக மட்டறவர்  கண்கலுக்கு
தெரியாது ....

நான் ரசித்த காதல் கவிதைகள் பாகம் 2

நீ என்னைக் காதலிக்கிறாயா என்பது புரியாத
அந்த ஆரம்ப நாட்களில் ... தெரியாத்தனமாக நீ அணிந்திருந்த உடையின்
வண்ணத்தில் என் சட்டையின் வண்ணம் இருந்ததைக் கவனித்த என் அயோக்கிய
நண்பன் ஒருவன் 'டேய் என்ன இரண்டு பேரும் ஒரே கலரில்...' கிண்டல்
செய்துவிட அப்போதே அவனைத் திட்டினேன் ... அவ்வளவு மகிழ்ச்சியாய்த்
திட்டமுடியுமா என்கிற ஆச்சரியத்துடன்.

அதன்
பிறகு அந்தச் சட்டையைப் போடவே கூச்சமாய்ப் போய் பெட்டியில் ஒளித்து
வைத்துவிட்டேன் ... என்று நான் இப்போது சொல்லிக்கொண்டிருக்கையில் நீ
முகத்தை மூடிக்கொண்டாய். ஏன் என்று கேட்டதற்கு ' நானும் அப்படித்தான்
ஒளித்து வைத்துக் கொண்டேன்' என்கிறாய்.

* கும்பலில் எல்லாம்

நீ போகாதே . . . யார் யாரோ மிதிக்கிறார்கள் உன் நிழலை.

* தொலைபேசியில்
எல்லாம்
நீ எனக்கு முத்தம்
தராதே அது உன் முத்தத்தை எடுத்துக் கொண்டு வெறும் சத்தத்தை மட்டுமே
எனக்குத் தருகிறது

*புவியின் ஈர்ப்பு
விசையில்
எப்போதாவது தவறி
விழுந்திருக்கிறேன். உனது விழியின் ஈர்ப்பு விசையில் எப்போதும் தவறாமல்
விழுந்துகொண்டிருக்கிறேன்.

*தெய்வமே..

உன்னை என் இதயத்திலிருந்து வெளியேற்றிவிட்டு. ஒரு பெண்ணைக்
குடிவைத்தற்க்காக கோபித்துக்கொண்டு என்னைக் கைவிட்டு விடதே!.. உன்னால்
தூ ணிலோ துரும்பிலோ கூட
வாசம் செய்யமுடியும். அவளால் முடியுமா?

Friday, July 9, 2010

Anathai !!...

Anathai Endru Nee Unnai Ennathe...

Nee Kadavulin Pillai...

Unakkul Ulla Thiramaigale Unakku Thuani...

Unakkul Ulla Arivu theeyai Valarthu Intha Ulagame Viyakkum padi Saathithu kaatu....

Andru Nee Intha Ulagathin Pillaiyaai Angeegarikkapaduvaai...

Andru Nee arivaai.,Anathai Nee Alla.,Unnai Anathaiyaakiya Un Uravugal Thaan Endru....

Nee Saathikka Piranthavan Enbathil Uruthi Koll....

Naalthorum Kadumayai Uzhaithu Paadupadu..

Unathu thiramaigalai Dheepamai veli kondu vanthu Suriyanai pola intha Ulagirku Oli veesu....

Nee Iraivanin Pillai enbathai nirupithu kaatu....

andru Indha Ulagam Unnai Oppu kollum
_Nee Anathai Alla Endru !!.....

நீ தரவேண்டிய உன்னத பரிசு:-

 உன் விரோதிக்கு மன்னிப்பு
 உன்னை எதிர்ப்பவனுக்குச் சகிப்புத் தன்மை
 உன் நண்பனுக்கு உன் செவிகள்.
 உன் மகன், மகளுக்கு, நீயே முன் மாதிரி ஆதல்
 உன் தகப்பனுக்குப் பணிவும் அன்பும்
 உன் தாய்க்கு உன்னைப் பற்றிப் பெருமைப்படும் நல்லொழுக்கம்.
 உனக்குத் தன்மானம்.
 பிற யாவருக்கும் ஈகை, இன்சொல்.