வேண்டும் தெய்வம்
வெவ்வேறாயினும்,
வேண்டுவதெல்லாம்
உன்னை மட்டுமே….
—-
நான் செய்யும் எதுவும்
உனக்காக,
நகம் வெட்டுவது உட்பட….
—-
ஆயிரம் இருக்கலாம்
உறவாய் உனக்கு….
ஆயினும் உயிராய்
நீ மட்டும் எனக்கு….
—-
எனை சுற்றி சூழ்ந்திருக்கிறாய்
பிரபஞ்சம் நிரப்பும்
காற்றைப் போல….
ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்
உன் இருத்தலை
சுவாசம் போல….
—-
உன்னாலேயே
என் பொறாமை தீ
எல்லைமீறி எரிகிறது….
நீ இதழ் பதிக்கும்
நீர் குவளைமீது கூட….
No comments:
Post a Comment