Thursday, March 22, 2012

என்கிறாய்…. ஏங்குகிறேன்….

என்னுடையது அனைத்தும்
உன்னுடையது என்கிறாய்….
உன்னை மட்டும்
என்னுடையது என்கிறாய்….
‘லூசு,
இது தான் காதல்’ என்கிறாய்…



-o0O0o-



உனக்காக
மீசைத் தியாகம் செய்தவனிடம்
”மடையா…
குத்துது’னு தான சொன்னேன்
வலிக்குது’னு எப்போ சொன்னேன்?”
என்கிறாய்…..



-o0O0o-



உன்னையே எப்போதும்
நினைக்கும் இதயத்தை
காயப்படுத்துவது ஏன்
என கேட்டால்,
‘இது உள்ளிருப்பு போராட்டம்’
என்கிறாய்…..



-o0O0o-



‘பேசாத போ’ என்கிறாய்….
திரும்பி அழைத்து
‘நான் கோபமா இருக்கேன்’
என்கிறாய்…..
மறுபடியும் அழைத்து
‘ஏன்டா கூப்ட மாட்ற?’
என்கிறாய்…..



-o0O0o-



இந்த
இன்ப இம்சையில்,
என்கிற’தெல்லாம்
நீ….
ஏங்குகிறதெல்லாம்
நான்….

-o0O0o-

No comments:

Post a Comment