கருவுற்ற சேதிதனை
கணவா உனக்குரைத்த
கணம்தனிலே
கண்டுகொண்டேன்
காதல் இன்னதென்று....
கனவுக்குள்ளும்
கால்கள் தரைதொடாது
கனிவாய் தாங்கும்
கைகளிலே
கண்டுகொண்டேன்
காமம் பொய் என்று....
மசக்கையின் போதும்
மாதம் ஆன பின்பும்
மடியோடணைத்து
உறங்கச்செய்யும் உன்னில்
கண்டுகொண்டேன்
உறவே வரம் என்று....
குழந்தை உதைப்பதும்
குரல்கேட்டு அசைவதும்
கூடி உணர்ந்து
சிலிர்க்கையில்
கண்டுகொண்டேன்
தாய்மை உனக்குமென்று....
உன் கருவதனை
நான் சுமக்க
என் காயமதை
நீ சுமக்க
கர்ப காலம் முழுதும்
காதல் காலம் ஆகாதோ...
No comments:
Post a Comment