நானாவிதத் தேன் தேடி
நாளும் சுவைத்தேன்..
நாதியிலார் நாசி காய்ந்து
நாம்பி நலிந்த கதை மறந்து
பாசி பூத்ததாய்த் தேய்ந்தது
பாணன் வீட்டுப் பாழுங்கிணறு
பாத்திரம் ஆனது அந்தோ அவன்
பாத்தில் தினக் கனவு
எய்ப்புண்டாம் எதிலும் எழுப்புண்டாம்
எய்துண்டாம் எதிரில் எரிவுண்டாம்
ஏற்புண்டாம் ஏயின் ஏக்கமுண்டாம்
ஏய்ப்புண்டாம் ஏற்பின் ஏர்புமுண்டாம்
பறவாதியோ என்ன பறதியோ
பனாத்தும் பகட்டும் பற்றுண்டு
பசப்பிழந்து பறண்டெடுத்து
பகுப்பிழந்து படாப்பழி சுமந்து
தகரடியும் தக்கடியுமாய்
தவறி வழி தடம் புரண்டு
தடாதடியும் தடாலடியுமாய்
தடுமாறித் தட்டழிந்தது வரவு
தேறுமோ தேனடை திரளுமோ
தேர்ந்தவன் தேங்கிடா நிலை
தேயுமோ தேசுமோ தேம்பிடா
தேற்றமே தேகிடம் தேங்குமோவென
வேகி வேசாடி
வேளைக்கொரு வேர்க்குரு ஒடித்து
வேலாழிக் கரையோரம் தீந்தென்றல் வேள்வியெடுத்து
வேண்டித்தவித்து வேசாறிப்போனேன்..
மேனோக்கிப் பார்க்கிறேன்..
மேகங்கள் மெல்ல மூடிக்கொண்டன
மேல் விழும் நீர் பார்க்கிறேன்
மேலனம் தவிர்த்து தப்பியோடக் காண்கிறேன்
சீறிய சிந்தனை எண்ணி சிரித்துக்கொண்டேன்..
சீற்றமில்லை சீவிய ரேகை துடைத்துக்கொண்டேன்..!!
No comments:
Post a Comment