அடங்கவில்லை...!
சீறும் சிங்கத்தின் சத்தம் கூட
சிறிது நேரம் அடங்கும்...!
கூவும் குயிலின் இசை கூட
இடையில் அடங்கும்...!
கரையும் காகம் கூட
காலைப்பொழுதோடு அடங்கும்...!
உன் நினைவால் என் உள்ளத்தில் எப்போதும்
அலைகள் அடங்காமல்
அலை பாய்ந்து கொண்டே இருக்கிறதடி...!
No comments:
Post a Comment